பரவும் பறவைக்காய்ச்சல் - 5 மாவட்டங்களுக்கு அலர்ட்! எந்தெந்த மாவட்டங்கள்?

ஆந்திராவில் அதிகரித்து வரும் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள 5 மாவட்டங்களில், பறவைக் காய்ச்சலைத் தவிர்க்க, பொது சுகாதாரத் துறை தீவிர முயற்சிகளைக் கட்டாயப்படுத்தியுள்ளது.

பரவும் பறவைக்காய்ச்சல் - 5 மாவட்டங்களுக்கு அலர்ட்! எந்தெந்த மாவட்டங்கள்?

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த 10 நாட்களில் 10,000 கோழிகள் உயிரிழந்துள்ளது. எச்.5.என்.1 இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.  எனவே, தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த மாவட்டமும் ஆந்திர மாநிலமும் இணைந்து செயல்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, கால்நடை பராமரிப்புத் துறையின் தேவைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு சோதனைச் சாவடிக்கும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். பறவைகள் ஏதேனும் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்தாலோ, களப்பணியாளர்களுக்கு உடனடியாக ஒருமுறை தெரிவிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோழி இறைச்சியை வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow