பாஜகவின் கோட்டைக்கு செக்....பீகாரில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை...!
பாஜகவின் கோட்டையாக உள்ள பீகார் தொகுதியில் ஜன சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் முன்னிலை வகிப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நீட் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பாஜகவுக்கு மிக பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் பாஜக ஆளும் மூன்று மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர் போராட்டத்திற்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதாலும் இது பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல் என்பதாலும் இந்த தேர்தல் தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளது.
What's Your Reaction?

