மக்களவைத் தேர்தல்.. தமிழகத்தில் காலை முதலே விறுவிறுப்பு.. வாக்களிக்க ஆர்வம் காட்டும் மக்கள்

மக்களவைத் தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.  மக்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்

Apr 19, 2024 - 07:41
மக்களவைத் தேர்தல்.. தமிழகத்தில் காலை முதலே விறுவிறுப்பு.. வாக்களிக்க ஆர்வம் காட்டும் மக்கள்

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் இன்று முதற்கட்டமாக தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமன்றி முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ( ஏப்ரல் 19) நடைபெறும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் அனைவரும் காலை முதலே வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடையும் எனவும், கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் அளிக்கப்பட்டு அவா்களும் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow