விஜயாவின் கோபத்துக்கு ஆளான செல்ல மகன் மனோஜ்.. ஆபத்தில் சிக்கும் ஸ்ருதியை மீட்ட முத்து..

Apr 13, 2024 - 13:17
விஜயாவின் கோபத்துக்கு ஆளான செல்ல மகன் மனோஜ்.. ஆபத்தில் சிக்கும் ஸ்ருதியை மீட்ட  முத்து..

ஸ்டார் விஜய்யில் தினமும் 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல்தான், இன்னிக்கு எல்லாருடைய விருப்பமான சீரியல் என்ற பெருமையை பெற்று இருக்கு. சனிக்கிழமை ஒளிப்பரப்பாக இருக்கும் எபிசோடுல என்ன நடக்கப் போகுதுங்கறததான் இப்ப பாக்கப்போறோம்.

இன்றைக்கு வெளியாக இருக்க சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்ல, மனோஜ் அவங்க அம்மா, அப்பா கிட்ட கனடா போறதுக்காக பணம் கேக்குறாரு. அந்த டைம்ல, வீட்ல முத்துவும், மீனாவும் கூட இருக்காங்க. 4 பேர் முன்னாடியே பணம் கேட்ட மனோஜ், எப்படியாவது பணம் கொடுத்தே ஆகணும்னு சொல்லி அடம்பிடிக்குறாரு.. அந்த சமயத்துல, அண்ணாமலை என்டர் ஆகி, உள்ளுர்லயே வேலை தேடிக்கோன்னு சொல்ல, என் படிப்புக்கு இந்த ஊர்ல எல்லாம் வேலை இல்லை, கனடாலதான் இருக்குனு சொல்லி வாதம் பண்றாரு மனோஜ். 

சரி, அதுக்கு இப்ப என்ன பன்னமுடியும்னு நீயே சொல்லுன்னு அம்மாவும், அப்பாவும் கேக்குறாங்க. அதான் வீடு இருக்கே, அந்த வீட்டை வச்சி 14 லட்சம் வாங்கித் தாங்கன்னு மனோஜ் சொல்ல, கோபமாகுற அம்மா விஜயா, பயங்கரமாக கத்தி சத்தம் போட்றாங்க.. அது மட்டுமில்லாம, இந்த வீட்டை உன்கிட்ட குடுத்துட்டு நாங்க நடுதெருவுல நிற்கணுமான்னு, சுத்தி இருக்க எல்லாரும் விஜயாவாவை பார்த்து கேள்வி கேக்குறாங்க... அதுல விஜயா ஷாக் ஆகுறாங்க.. அத பாத்து முத்து பயங்கரமா சிரிக்குறாரு.. இன்னொரு பக்கம், அம்மா, நீயா இப்படி பேசுறனு மனோஜும் ஷாக் ஆகுறாரு.

இப்படியே எல்லாரும் மாறி மாறி பேச, தீடீர்னு மனோஜோட மனைவி ரோகினி உள்ள வந்து, என்னாச்சுனு கேக்குறாங்க. உடனே மனோஜ், அம்மா, அப்பா கிட்ட பணம் கேக்க சொல்லி நீதான ரோகினி சொன்னன்னு உண்மையை போட்டு உடைக்குறாரு மனோஜ். இதுல பயந்து போன ரோகினி, பொறுமையா பேசுறாங்க.

மீண்டும் கோபமான விஜயா, உன் அப்பாகிட்ட கேட்டு பணம் வாங்கி குடுனு ரோகினியையும் சத்தம் போட்றாங்க. அப்புறமும் விடாம, மனோஜ் அம்மாவ தொல்லை பண்ண, என் வீட்டை நான் யாருக்கும் தர மாட்டேன், அது எங்க அப்பா எனக்காக கொடுத்ததுனு சொல்லிட்டு, கோபமா போயிட்றாங்க.. அப்போ, என்ன பன்றதுனு தெரியாத மனோஜ் திருதிருனு முழிக்கிறான்.

அடு்த்த சீன்ல, மனோஜ் பார்க்குல உட்கார்ந்து இருக்காரு. பார்க் ஃபிரண்டை வரவச்சி, அவர்கிட்ட வீட்ல நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி, கனடா போறதுக்கு வட்டிக்கு பணம் கேக்குறாரு. அவரு 14 லட்சம் எல்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்ச சாமியார்கிட்ட கூட்டிட்டு போறேன்.. அவர் உனக்கான வழிய சொல்லி, பரிகாரம் பன்ன சொல்லுவாருனு சொல்லி, அந்த சீனை அப்படியே முடிச்சுடறாங்க..

கடைசியா பாக்கபோற சீன், ஸ்ருதி பத்தினதுதான்.. ஸ்ருதி வண்டி ஓட்டிட்டு போயிட்டு இருக்காங்க. குறுக்குல ஒரு கார் வந்து நிக்குது.. அந்த கார்ல ஸ்ருதிக்கு பார்த்த முன்னாள் மலையாள மாப்பிள்ளை இருக்காரு. அந்த பையன்கிட்ட ஸ்ருதி தனியா மாட்டிக்கிறாங்க.. அப்புறம் அவன் அவ கைய புடிச்சி இழுத்து வம்புபன்றான்.. அப்ப தீடீர்னு முத்து அந்த ரோட்ல காரு ஓட்டிட்டு வர.. இந்த காட்சிய பார்த்த உடனே காரை விட்டு இறங்கி, தன் தம்பி பொண்டாட்டிக்கிட்ட வம்பிஇழுத்த பையனை போட்டு  அடி அடின்னு அடிச்சு, பொளந்து கட்டிட்றாரு. அதுக்கு அந்த பையன் உன்ன சும்மா விட மாட்டேன்.. எங்க அப்பா யாருனு தெரியுமா அப்டி இப்படீன்னு கத்தி, அங்க இருந்து தப்பிச்சு போயிட்றான்...

இத பாத்த ஸ்ருதி என்ன பன்றதுனு தெரியாம அமைதியா நிக்குறாங்க.. அவங்ககிட்ட முத்து போய் பேசி, வீட்டுக்கு வான்னு கூப்புட்றாரு.. நா வரலைன்னு ஸ்ருதியும் சொல்றாங்க.. என் தம்பி பாவம், அவனை தண்டிக்காத... உனக்கு என்மேல தான கோபம், என் மேல வேணா கோபப்பட்டுக்கோ, அவன் பாவம்னு பேசுறாரு.. இத கேக்குற ஸ்ருதி, யோசிக்குற மாதிரி இன்னிக்கான எபிசோட் முடியுது...

திங்கட்கிழமை தான் ஸ்ருதி மாமியார் வீட்டுக்கு போவாங்களா மாட்டாங்களானு தெரியும்...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow