நாங்கள் கொள்ளையடிக்கவும் இல்லை, எந்தப் பணமும் எங்களிடம் இல்லை - அமைச்சர் ரகுபதி

Mar 5, 2024 - 19:52
நாங்கள் கொள்ளையடிக்கவும் இல்லை, எந்தப் பணமும் எங்களிடம் இல்லை - அமைச்சர் ரகுபதி

திமுகவினர் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவும் இல்லை என்றும், எந்த பணமும் தங்களிடம் இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, திமுகவை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, 10 பணக்காரர்களிடம் கொடுத்து வைத்துள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வந்தாலே இந்தியாவில் அனைத்து மக்களும் கோடீஸ்வரர்களாக மாறிவிடுவார்கள் என்றார். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கண்துடைப்புக்காக எய்ம்ஸ் கட்டுமானப் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக குற்றம்சாட்டிய ரகுபதி, பாஜகவினர் தேர்தலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்றும் சாடினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow