பதவியேற்பு விழா - 2 அமைச்சர்கள் மிஸ்ஸிங்.. காரணம் இதுதானா!

தமிழ்நாடு அமைச்சரவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 4 அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் அமைச்சர் பிரிஆரும், அமைச்சர் சிவசங்கரும் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Sep 29, 2024 - 21:55
பதவியேற்பு விழா - 2 அமைச்சர்கள் மிஸ்ஸிங்.. காரணம் இதுதானா!

தமிழ்நாடு அமைச்சரவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 4 அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் அமைச்சர் பிரிஆரும், அமைச்சர் சிவசங்கரும் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவதாகவும், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர்,  கோ.வி.செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேலும், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் மற்றும் கே.ராமசந்திரன் அமைச்சவையில் இருந்து நீக்கப்பட்டு, பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மெய்யநாதன், மதிவேந்தன் மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோரின் துறைகளும் மாற்றி மாற்றியமைக்கப்பட்டது. 

இந்நிலையில், புதிதாக அமைச்சரவை சேர்க்கப்பட்டவையில் சேர்க்கப்பட்டவர்களுக்கான பதவியேற்பு விழா, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் முதலாவதாக சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவான ராஜேந்திரனுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்  செய்து வைத்தார். 

இதையடுத்து செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்று கொண்டார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் கொறடாவாக இருந்த திருவிடைமருதுார் எம்.எல்.ஏ., கோ.வி.செழியன் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 

பின்னர் ஆவடி சா.மு.நாசருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்  செய்து வைத்தார். இந்நிலையில் அவர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே இருந்த அதே மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவான ராஜேந்திரனுக்கு சுற்றுலா துறையும், அரசின் கொறடாவாக இருந்த கோ.வி.செழியனுக்கு உயர்கல்வித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மொத்தமுள்ள 34 அமைச்சர்களில், PTR, சிவசங்கர் ஆகிய 2 அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. மதுரையில் இருந்து சென்னை வர விமான டிக்கெட்டை PTR 1.20 மணிக்கு புக் செய்துள்ள நிலையில், விமானம் தாமதம் காரணமாக பதவியேற்பு விழாவிற்கு அவர் வர முடியவில்லை எனத்தகவல் வெளியாகவுள்ளது.

மகனின் படிப்பிற்காக கடந்த 26ஆம் தேதி சிவசங்கர் லண்டன் சென்ற நிலையில், லண்டனில் உள்ளதால் சிவசங்கரால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலவில்லை. ஆனால், சிவசங்கர் முதல்வரிடம் அனுமதி பெற்றே லண்டன் சென்றதாகவும், ஏற்கனவே PTR முதல்வரிடம் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow