மாஸ்டர் பட பாணியில் கோவையில் குட்கா விற்பனை

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறி வைத்து சில்லறை வியாபாரிகள் கஞ்சா,குட்கா விற்பனை செய்வதாக குறிப்பிட்டார்

Dec 1, 2023 - 17:24
Dec 1, 2023 - 19:17
மாஸ்டர் பட பாணியில் கோவையில் குட்கா விற்பனை

விஜய் நடித்த மாஸ்டர்  பட பாணியில், கையில் குறிப்பிட்ட அடையாளத்துடன் வந்தால் தான் குட்கா, புகையிலை விற்கப்படுவதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் புறநகர் இயங்கும் காவல்துறை ரோந்து வாகனங்களில், அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வழங்கும் நிகழ்ச்சி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.எல் அண்ட் டி குழுமம் சார்பில்  இந்த கேமரா, காவல் துறை ரோந்து வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு டிபி நினைவுக்கொள்கலனுடன் பொருத்தப்பட்டுள்ள இதிலிருந்து, காவல் துறை கட்டுப்பாட்டி அறையுடன் இணைத்து வீடியோ காட்சிகளை பார்க்கும் வசதி உள்ளது.எளிதில் உடையாத வகையிலும், தண்ணீரால் பாதிக்கப்படாத வகையில் இந்த கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது.கேமராவுடன் இணைக்கப்பட்ட 18 ரோந்து வாகனங்களை காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று உரிய காவல் நிலையத்திற்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவல்துறையின் மூன்றாவது கண்ணாக இந்த கேமராக்கள் செயல்படும்.ஐஆர் விஷன், ஜிபிஎஸ் வசதிகளுடன் கூடிய இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் 45 நாட்களுக்கு சேமிக்கும் திறன் உள்ளது.அடுத்த கட்டமாக காவல்துறையின் இருசக்கர ரோந்து வாகனங்களிலும், கேமரா பொருத்தப்படும்.தற்போது கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 11 ஆயிரம் கேமராக்கள் இயக்கத்தில் இருப்பதாகவும், இதன் மூலம் குற்ற சம்பவங்கள் குறைந்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு பிடிப்பதற்கும், இந்த கண்காணிப்பு கேமராக்கள் பேரு உதவியாக இருக்கிறது.பைக் சாகசங்களில் ஈடுபட்ட வாலிபர்களை அழைத்து, எச்சரிக்கை விடுத்திருப்பதால் கடந்த நாட்களில் சமூக வலைதளங்களில் பைக் சாகச காட்சிகள் பதிவிடுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ஆன்லைன் மோசடி தொடர்பாக 2500 புகார்கள வந்துள்ளது.ஆன்லைன் மோசடி  பேர்வழிகள், ஐடி துறையில் பணிபுரிவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. கேரளா மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்திற்குள், மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் தடுக்கும் விதமாக 14 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு நடைபெறுகிறது. நக்சல் தடுப்பு குழுவினர் மலை கிராமங்களில் தொடர்  ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, கோவை மாவட்டம் முழுவதும் நாள்தோறும் புகையிலை, குட்கா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறி வைத்து சில்லறை வியாபாரிகள் கஞ்சா,குட்கா விற்பனை செய்வதாக குறிப்பிட்டார்.மேலும், மாஸ்டர் பட பாணியில் தினந்தோறும் புகையிலை வியாபாரிகள் ஒரு குறியீட்டுடன், குறிப்பிட்ட அடையாளத்துடன் வந்தால் தான் புகையிலை,குட்கா விற்பதாக தெரிவித்தார்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களே இதுபோன்ற புகையிலை, குட்கா விற்பனை குறித்து போலீசுக்கு உபயோகமான தகவல்கள் கொடுப்பதாக மாணவர்களை பாராட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow