நீர்த்தேக்க தொட்டி விவகாரம்..எம்.எல்.ஏவை சூழ்ந்த மக்கள்.. வேலூரில் பரபர

வேலூர் சின்ன அல்லாபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அசுத்தமாக இருப்பது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ  வெளியான நிலையில், வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் மாநகராட்சி ஆணையர் ஜானகி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது அவர்களை அங்குள்ள பொதுமக்கள் சுற்றி வளைத்து அடுக்கடுக்கன புகார்களை முன்வைத்தனர்.

Sep 22, 2024 - 11:03
நீர்த்தேக்க தொட்டி விவகாரம்..எம்.எல்.ஏவை சூழ்ந்த மக்கள்.. வேலூரில் பரபர

வேலூர் சின்ன அல்லாபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அசுத்தமாக இருப்பது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ  வெளியான நிலையில், வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் மாநகராட்சி ஆணையர் ஜானகி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது அவர்களை அங்குள்ள பொதுமக்கள் சுற்றி வளைத்து அடுக்கடுக்கன புகார்களை முன்வைத்தனர்.

வேலூர் மாநகராட்சி நான்காவது மண்டலம் 48வது வார்டு சின்ன அல்லாபுர பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இந்தக் குடிநீர் தொட்டி  அருகிலும் குப்பைகள் கொட்டிய நிலையில் உள்ளது.

மேலும் குடிநீர் தொட்டியில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டு முதல் தொட்டியில் மேல் பகுதி வரை மது பாட்டில், பீடி, சிகரெட், பிளாஸ்டிக் இந்த குடிநீர் தொட்டியில் பரவலாக காணப்படுகிறது. வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போது எம்எல்ஏ-வை சூழ்ந்து கொண்ட அப்பகுதி மக்கள், தினமும் குடிநீர் தொட்டியின் மீது ஏறி போதை ஆசாமிகள் மது அறுந்திவிட்டு பாட்டிலை தொட்டிக்குள்ளே போட்டுவிடுவதாகவும், இரவு நேரங்களில் குடிநீர் தொட்டியின் மீது ஏறி பர்த்டே பார்ட்டி வைத்து ரகளை செய்வதகவும்  அடுக்கடுகான புகார்களை கூறினர்.

இதனை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எம்.எல்.ஏ, கார்த்திகேயன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். ஆனால், ஒரு கட்டத்தில்  ஆவேசமான எம்.எல்.ஏ, கார்த்திகேயன் "இப்போது மட்டும் இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்களே அந்த போதை கும்பல் வரும் போது நீங்கள் கூட்டமாக சேர்ந்து அவர்களை அடித்து விரட்டி இருக்க வேண்டியதுதானே ? என பொதுமக்களிடம் ஆவேசமாக கூறினார்.

அதனையடுத்து, உடனடியாக குடிநீர்  தொட்டியை சுற்றி சுற்றுச்சுவர்  அமைத்து, மின்விளக்கு மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தருவதாகவும். மேலும் தினமும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்துக்கு அனுப்பி வைப்பதாகவும் எம்எல்ஏ கார்த்திகேயன் உறுதியளித்தார். இதனையடுத்து அங்கு குவிந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow