ராஜஸ்தான் அணியில் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி?

ரவீந்திர ஜடேஜா மீது கேப்டன் பதவி வீசப்படுகிறதா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணியில் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி?
அனில் கும்ப்ளே

இந்திய ஸ்பின்னர் அனில் கும்ப்ளே, JioStar IPL ரிட்டென்ஷன் ஷோவில் இந்த டிரேட் குறித்து விரிவாகப் பேசினார். “ரவிந்திரன் ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸுக்கு திரும்புவது பெரிய நகர்வு. பொதுவாக CSK தங்கள் வீரர்களை, குறிப்பாக ஜடேஜா போன்ற தரமான, நீண்ட உறவு உள்ள வீரரை விடுவதில்லை. அவர்களை விட்டுவிட்டது எனக்கு ஆச்சரியம்,” என்று கும்ப்ளே சொன்னார். CSK-யின் இந்த முடிவு, அணியின் பெரிய மறுசீரமைப்பை (rebuild) காட்டுகிறது என்றும், ஜடேஜாவை விட்டதால் அணியின் பேட்டிங் மற்றும் போவ்லிங் இரண்டையும் வலுப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சஞ்சு சாம்சன் CSK-க்கு வருவது சிறந்த நகர்வு என்றும், அவர் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக அணிக்கு ஸ்திரத்தன்மை தருவார் என்றும் பாராட்டினார். கும்ப்ளேயின் முக்கிய கேள்வி: “ஜடேஜாவுக்கு கேப்டன்சி சொன்னார்களா?” RR சஞ்சு சாம்சனை விட்டதால் புதிய கேப்டன் தேடுகிறது. “ராஜஸ்தான் ராயல்ஸுக்கு கேப்டன் தேவை. ரியான் பராக் கடந்த சீசனில் சஞ்சு இல்லாத போது சில போட்டிகளை லெட் செய்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் எப்போதும் கேப்டன்சி கனவு வைத்திருக்கிறார். இளம் த்ருவ் ஜூரல் நல்ல மனோதிடன் கொண்டவர். வெளிநாட்டு வீரராக சாம் கர்ரன் உள்ளார். இதில் ஜடேஜா மிக சுவாரஸ்யமான விருப்பம்,”

ஜடேஜா 2022-ல் CSK-யை கேப்டனாக வழிநடத்தியவர், பின்னர் MS தோனிக்கு கைமாற்றினார். RR-ல் ஜடேஜா கேப்டனாக வந்தால், அணியின் இளம் வீரர்களை (பராக், ஜெய்ஸ்வால்) வழிநடத்தி, தொடக்கத்தில் நன்றாக இருந்து பிளேஆஃபில் தடுமாறும் பிரச்சினையை சரி செய்யலாம் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow