கார்த்திகை தீப திருவிழா : டிச 2.3 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் 

கார்த்திகை தீப திரு​விழாவை முன்​னிட்டு திருவண்ணாமலை டிச. 2, 3 ஆகிய தேதி​களில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

கார்த்திகை தீப திருவிழா : டிச 2.3 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் 
கார்த்திகை தீப திருவிழா

இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தின் மிக​வும் பிரசித்தி பெற்ற கார்த்​திகை தீபத் திரு​நாளை முன்​னிட்டு தொலை​தூரப் பயணி​கள் திரு​வண்​ணா​மலைக்கு சென்று வர ஏது​வாக நாகர்​கோ​வில், திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, செங்​கோட்​டை, மதுரை மற்​றும் கோவை ஆகிய ஊர்​களி​லிருந்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்​து, இருக்கை மற்​றும் படுக்கை வசதி கொண்ட குளிர்​சாதனப் பேருந்​துகள் டிச. 2, 3 ஆகிய நாட்​களில் இயக்​கப்பட உள்ளன.

மேலும், திரு​வண்​ணா​மலை​யில் நடை​பெறும் பவுர்​ணமியை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து திரு​வண்​ணா​மலைக்கு 160 அதிநவீன குளிர்​சாதனம் மற்​றும் குளிர்​சாதனமில்லா இருக்கை மற்​றும் படுக்கை வசதி​யுடன் கூடிய பேருந்​துகள் அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழகம் மூலம் டிச. 3,4 ஆகிய நாட்​களில் இயக்​கப்பட உள்​ளன.

இணையதளம், செயலி: இச்​சிறப்பு பேருந்​துகளுக்கு www.tnstc.in இணையதளம் மற்​றும் டிஎன்​எஸ்​டிசி செயலி ஆகியவற்றின் மூல​மாக இரு​புற​மும் முன்​ப​திவு செய்து பயணிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow