நல்ல பணி செய்யும் படி தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார் - அருண் ராஜ்
த.வெ.க-வில் இணைந்த ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், தமிழ்நாட்டிற்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்போம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் பிப்ரவரி 2 ஆம் தேதி கட்சி ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்தை நிறைவு செய்து, 2 வது வருடத்தில் பயணிக்கிறது. தமிழகம் முழுவதும் ஒரு தொகுதிக்கு 2 மாவட்டச்செயலாளர்கள் நியமித்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனாவிற்கு தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.
2026-ல் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் களமிறங்கிய தவெகவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இன்று த.வெ.க-வில் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜிற்கு இணைந்துள்ளது அக்கட்சிக்கு மேலும் பலமாக பார்க்கப்படுகிறது. தற்போது, அவருக்கு தவெகவின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக பொறுப்பு வழங்கட்டுள்ளது. இந்த நிலையில் அருண் ராஜ் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்தார். அங்கு பெரியாரின் நினைவிடத்திற்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து தவெகவின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெசிய அவர், இன்று கட்சியில் இணைந்த பிறகு எங்களின் கட்சியின் கொள்கை தலைவரான பெரியாருக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி உள்ளேன். கொள்கை பிடிப்பு தான் எங்கள் கட்சியின் அடித்தளம். தமிழ்நாட்டிற்கான நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்போம்.
நீண்ட காலமாக அரசியல் கட்சியில் சேர எண்ணம் இருந்தது. முழுவிருப்பத்தின் அடிப்படையிலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துள்ளேன். இன்னும் எனக்கு 15 ஆண்டுகள் மத்திய அரசு பணிக்கான சர்வீஸ் இருக்கிறது. நல்ல பணி செய்யும் படி தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார் என்று அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






