நாக சைதன்யா - சோபிதாவிற்கு இடையே பிரிவு வரும்.. குண்டு போடும் ஜோதிடர்

நாக சைதன்யா சோபிதா திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்காது என்று கணித்துள்ளார் பிரபல ஜோதிடர் ஒருவர். நாகசைதன்யா சமந்தா இடையேயான திருமண வாழ்க்கை பிரிவு பற்றி கணித்து கூறியவரும் இதே ஜோதிடர்தான்.

Aug 13, 2024 - 13:37
நாக சைதன்யா - சோபிதாவிற்கு இடையே பிரிவு வரும்.. குண்டு போடும் ஜோதிடர்
naga chaitanya with sobhita dhulipala

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா ஜோடி திருமணம் செய்து கொண்டாலும் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்றும் விரைவில் இருவரும் பிரிவார்கள் என ஜோதிடர் ஒருவர் கூறியிருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் தீயாய் பரவுகிறது. 

நாக சைதன்யா காதல்: 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா.  இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜோஷ்’ திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். பின் கௌதம் இயக்கத்தில் இவர் நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிவு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தில்தான் நாகர்ஜூனா சமந்தா ஜோடி இணைந்தது. 

சமந்தா உடன் காதல்:

இருவருக்கும் இடையே காதல் மலரவே  கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வந்தார் சமந்தா.  இவர்கள் இருவரும் கொண்டார்கள். குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்கள். அதோட இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

பிரிந்த ஜோடி 

இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் பல அதோடு இவர்களுடைய பிரிவுக்கு காரணம், "ஊ சொல்றியா" என்ற பாடல் என்றும் பலரும் கூறியிருந்தார்கள். அந்த பாடலில் நடிகை சமந்தா பயங்கர கிளாமராக நடனமாடியிருந்தார். ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை.

நாக சைதன்யா சோபிதா காதல்

சமந்தா உடனான விவாகரத்திற்குப் பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது. அதனை இருவரும் மறுக்கவும் இல்லை ஒப்புக்கொள்ளவும் இல்லை. அதே நேரத்தில் இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டது. இந்த நிலையில்தான் சமீபத்தில் நாகர்ஜூனா வீட்டில் விசேஷம் நடந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தவர்தான் இந்த சோபிதா துலிபாலா. 

நாக சைதன்யா சோபிதா திருமண நிச்சயம்:

நாக சைதன்யா சோபிதா இடையேயான உறவு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாகர்ஜூனா வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த நிச்சயதார்த்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதே ஆகஸ்ட் 8ஆம் தேதிதான் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலை நாக சைதன்யாவிடம் சொன்னாராம் சமந்தா. அவரை கடுப்பேற்றவே அதே நாளில் திருமண நிச்சயத்தை நடத்தியுள்ளாராம் நாக சைதன்யா. 

சமந்தாவிற்கு ஆறுதல்:

இதனைத் தொடர்ந்து நடிகை சமந்தாவிற்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்‌. வைரத்தை தொலைத்து விட்டு, தங்கத்தை தேடுகிறார் என நாக சைதன்யாவுக்கு எதிராகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். நாகர்ஜூனா தனது மருமகள் பற்றி பேசிய வீடியோவும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நாக சைதன்யா சோபிதா இடையே பிரச்சினை:

இதனிடையே நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் விரைவில் பிரிவார்கள் என்று கூறியுள்ளார் ஜோதிடர் ஒருவர். ஆந்திராவில் பிரபலமாக  இருக்கும் ஜோதிடர் வேணு சுவாமி, நாக சைதன்யா – சோபிதா திருமண வாழ்க்கை குறித்து கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆக உள்ளது. 

பிரிவுக்கு காரணம் 

ஜோதிடர் வேணு சுவாமி, அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். சமந்தா மற்றும் சோபிதாவின் ஜாதகத்தை அலசினால் , இரண்டு ஜாதகத்திலுமே சனியின் பார்வை செவ்வாய் மீதுதான் இருக்கிறது. அதுவும் சோபிதாவின் ஜாதகத்தில் செவ்வாயின் பார்வை சுக்கிரன் மற்றும் குருவின் மீது இருக்கிறது. அதனால் வரும் 2027 ஆம் ஆண்டு வரை நன்றாக தான் இருப்பார்கள். ஆனால், அதற்குப் பிறகு அவர்களது திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா என்று சந்தேகம்தான். சோபிதாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் பிரிவு ஏற்படுவது நிச்சயம் என்று அடித்துச்சொல்லியுள்ளார் ஜோதிடர். இவர்களின் பிரிவுக்கு ஒரு பெண் தான் அவர்களின் இருப்பார் என்றும் கூறியுள்ளார். 

ஜாதகத்தின் படி, பொருத்தம் பார்த்தால் நாக சைதன்யா- சமந்தாவுக்கு 50 மதிப்பெண்ணும், நாக சைதன்யா- சோபித்தாவுக்கு பத்து மதிப்பெண்ணையும் தருவேன் என்று கூறியுள்ளார். மேலும், இவர் நாக சைதன்யா- சமந்தா பிரிவு குறித்து ஏற்கனவே கணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விஷயம் தான் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow