அரிசியில் அதிகரிக்கும் ஆர்சனிக்.. விஷமாகும் உணவு: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு
2014 முதல் 2023 வரை நெல் அரிசியிலுள்ள அடிப்படை உயிர் வேதியியல் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

மாறிவரும் காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் CO₂ அளவுகளால், ஆசியாவில் பிரதான உணவாக கருதப்படும் அரிசியில் ஆர்சனிக் (Arsenic) அளவு கணிசமாக அதிகரிக்கக்கூடும் என தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் (The Lancet Planetary Health) வெளியிடப்பட்டுள்ள ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழக மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (columbia University mailman school of public health) சார்பில் காலநிலை மாற்றங்களால் அரிசியில் ஆர்சனிக் அளவு அதிகரிக்குமா? என மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள், 2050 ஆம் ஆண்டுக்குள் பல ஆசிய நாடுகளில் கனிம ஆர்சனிக் வெளிப்பாடு அதிகரிக்கக்கூடும் என்பதோடு, புற்றுநோய் அபாயங்களும் அதிகரிக்கும் என கண்டறிந்துள்ளது.
நிலத்தடி நீரில் ஆர்சனிக்:
ஆர்சனிக் என்பது ஒரு நச்சுப்பொருளாகும். நிலத்தடி நீர்களிலும் ஆர்சனிக் காணப்படலாம். கடந்த 2018 ஆம் ஆண்டு, TERI school of Advanced studies & the Quaid-i-azam university சார்பில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரில், அளவுக்கு அதிகமாக ஆர்சனிக் கலந்துள்ளதாக கண்டறியப்பட்டது. ஆர்சனிக் பயன்பாடு நமது உடலுக்கு பல்வேறு வகையில் தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருளாகும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் முடிவில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விவரங்கள் பின்வருமாறு- ”தெற்கு சீனா, தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவில் அரிசி நுகர்வு ஏற்கனவே புற்றுநோய் அபாயத்திற்கு ஒரு https://library.gimur.org/ முக்கிய காரணமாக அறியப்பட்டுள்ளது. நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்றுநோய்கள் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சினைகளும் அதிகளவிலான ஆர்சனிக் உட்கொள்ளலால் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.
28 வகையான நெல் இரகங்களில் ஆய்வு:
ஆய்வானது, 2014 முதல் 2023 வரை நெல் அரிசியிலுள்ள அடிப்படை உயிர் வேதியியல் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 28 வகையான நெல் இரகங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 7 ஆசிய நாடுகளான வங்கதேசம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவற்றிற்கான கனிம ஆர்சனிக் அளவுகள் மற்றும் சுகாதார அபாயங்களும் இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.”
கொலம்பியா மெயில்மேன் பள்ளியின் சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் இணைப் பேராசிரியர் டாக்டர் லூயிஸ் ஜிஸ்கா ஆய்வு குறித்து கூறுகையில், “நெல்லின் ஆர்சனிக் உறிஞ்சுதல் தன்மையினை குறைப்பதற்கான தாவர இனப்பெருக்க முயற்சிகள், மேம்பட்ட மண் மேலாண்மையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றமானது உலகளாவிய உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள சூழ்நிலையில், அரிசியில் ஆர்சனிக் வெளிப்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கையினை விரைந்து எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஆய்வானது எடுத்துரைக்கிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






