அன்புமணி வாதங்களுக்கு நோ: மாம்பழ சின்னம் வழக்கு 3 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

அன்புமணி வாதங்களுக்கு நோ: மாம்பழ சின்னம் வழக்கு 3 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
மாம்பழ சின்னம் வழக்கு 3 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக தலைவர் அன்புமணிக்கும்,  நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரியும், கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல்,   சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடராக தனக்கு தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், டில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கும் என உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் இதுநாள் வரை சின்னத்தை முடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அப்போது அன்புமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜா இந்த வழக்கில் தங்கள் வாதத்தை கேட்க வேண்டும் என்றார்.

இந்த வழக்கில் தங்களை இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது நீதிபதிகள் எதிர்தரப்பினராக இல்லாத போது அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டனர். இது அன்புமணிக்கு தரப்பு பின்னடைவாகி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow