பிரதமர் மோடி இந்தியாவில் ஊழல் பள்ளியை நடத்துகிறார் - ராகுல்காந்தி கடும் விமர்சனம்..
இந்தியாவில் ஊழல் பள்ளியை பிரதமர் நரேந்திர மோடி நடத்துகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
![பிரதமர் மோடி இந்தியாவில் ஊழல் பள்ளியை நடத்துகிறார் - ராகுல்காந்தி கடும் விமர்சனம்..](https://kumudam.com/uploads/images/202404/image_870x_66235c8cb7666.jpg)
மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், அறிவியல்பூர்வமான ஊழலை செய்வது எப்படி என்ற பாடத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அத்தியாயத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சியினருக்கு கற்பிப்பதாக ராகுல்காந்தி தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி ED,IT சோதனை மூலம் கைப்பற்றப்படும் பணத்தை நன்கொடையாக மாற்றுவது எப்படி, நன்கொடைகள் பெற்றபின் ஒப்பந்தங்கள் விநியோகிக்கப்படுவது எவ்வாறு, வாஷிங் மெஷினில் துவைப்பதுபோல் ஊழல் கரைகளை எப்படி சுத்தம் செய்வது, புலனாய்வுத் துறைகளை பயன்படுத்தி ஜெயில்-ஜாமீன் விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது என்பதெல்லாம் அதில் விளக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். விரைவில் இண்டி கூட்டணி அரசு, பாஜகவின் ஊழல் பள்ளியை பூட்டி நிரந்தரமாக மூடும் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)