வேட்புமனு தாக்கல் தொடர்பான பணிகள்.. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை..

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்

Mar 18, 2024 - 18:03
வேட்புமனு தாக்கல் தொடர்பான பணிகள்.. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை..

வேட்புமனுத் தாக்கல் மற்றும் தேர்தலுக்கானப் பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் வேட்புமனுத் தாக்கலுக்கான ஏற்பாடுகள், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிவது, பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் பணிகளை கண்காணிப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில அளவிலான தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலும்,  வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு காணும் அழைப்பு மையத்திலும் ஆய்வு மேற்கொண்ட சத்யபிரதா சாகு, அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow