அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை பார்த்த செக்யூரிட்டி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

பீகார் மாநிலம், மேற்கு சம்​பரன் மாவட்​டம் பகாகா பகு​தி​யில் அரசு மருத்​து​வ​மனை உள்​ளது. அங்கு வேலை பார்க்​கும் செக்​யூரிட்டி ஒரு​வர், நோயாளி ஒரு​வருக்கு தையல் போட்டு பேண்டேஜ் போடும் புகைப்​படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி​ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை பார்த்த செக்யூரிட்டி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை பார்த்த செக்யூரிட்டி

பீகார் மாநிலம் “பகாகா மருத்​து​வ​மனைக்கு அருகே நடந்த டெம்​போ, வேன் மோதிக்​கொண்ட விபத்​தில் பலர் காயமடைந்​தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வேனில் காயமடைந்​தவர்​கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அப்​போது, மருத்​து​வ​மனை​யில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்​லாத காரணத்தால், அங்​கிருந்த செக்​யூரிட்டி ஒரு​வர் நோயாளி​யின் காயத்தை தையலிட்டு பேண்​டேஜ் போட்டு சிகிச்சை அளித்துள்ளார். இதனை அந்த ஆம்​புலன்ஸ் வேன் டிரைவர் வாசிம் அக்​தரும், காயமடைந்த சுரேந்​திர பாசி என்பவரும் தெரி​வித்தனர்.

இது குறித்​து, பகாகா மருத்​து​வ​மனை​யின் துணை கண்காணிப்பாளர் டாக்​டர் அசோக் குமார் திவாரி கூறும்​போது, “இந்த மருத்​து​வ​மனை​யில் போதிய டாக்​டர்​கள், நர்​ஸ்​கள், ஊழியர்​கள் இல்​லை. ஆபரேஷன் தியேட்​டர் உதவி​யாளர்​கள், கட்டுப்​போடும் ஊழியர்​கள் பணி​யிடங்​கள் பல ஆண்​டு​களாக காலி​யாக உள்​ளன.

இருக்​கும் ஊழியர்​களை வைத்து மருத்​து​வ​மனையை நடத்தி வரு​கிறோம். விபத்து நடந்த அன்று காயமடைந்தவர்​கள் வந்​த​போது ஒரு​வருக்கு அதி​க​மாக ரத்​தப்​போக்கு இருந்​தது. இதையடுத்து டாக்​டர் ஒரு​வரின் மேற்பார்வையில்​தான் செக்யூரிட்டி  தையல் போட்​டார்” என விளக்கம் அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow