போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தைக்கு தயார் -அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தமிழகம் முழுவதும் 20,000 பேருந்துகள் ஓடும் நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விபத்துக்கள் நடைபெறுகிறது.

Jan 10, 2024 - 17:30
Jan 10, 2024 - 18:37
போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தைக்கு தயார் -அமைச்சர் சிவசங்கர் பேட்டி

பொங்கல் எந்த ஒரு சிரமமின்றி பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்பதே முதலமைச்சரின் உத்தரவு என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பணிகளையும் பேருந்துகள் வழக்கமான நிலையில் இயங்கி வரும் நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு திடீரென வருகை தந்தார்.அரசு பேருந்து பணிமனையை பார்வையிட்ட பின்னர் பேருந்து நிலையத்தில் நின்று இருந்த அரசு போக்குவரத்து பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,”  தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் உத்தரவின்பேரில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டேன்.

விழுப்புரம் கோட்டத்தில் காஞ்சிபுரம் மண்டலத்தில் 365 பேருந்துகள் முறையாக இயங்கி வருகிறது.பொதுமக்கள் அச்சமின்றியும் வழியில் தங்கு தடை இல்லாமல் பேருந்து பயணம் செய்யவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பேருந்துகள் எந்த ஒரு சுனக்கமும் இல்லாமல் போக்குவரத்து தடையில்லாமல் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் மக்கள் பயணம் செய்யலாம்.

பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கில் ஏற்கனவே சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல் கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு செல்லும் பேருந்துகள் எந்த ஒரு இடையூறும் இன்றி இயங்கும்.

பெரும்பாலான பணியாளர்கள் பேருந்து இயக்குவதற்கு வந்துவிட்டனர். மிக குறைவானவர்களே வரவில்லை.  தேவைப்படுகின்ற இடத்தில் தற்காலிக பணியாளர்களை கொண்டு இயக்கும் சூழல் உள்ளது. ஏனென்றால் அரசுக்கு மக்கள்தான் முதலில், மக்களுக்காக சேவையாற்றுவதுதான் அரசின் கடமை, அரசு ஊழியர்களின் கடமை, அரசியல்வாதிகளின் கடமை. எனவே, பொங்கல் எந்த ஒரு சிரமமின்றி பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

 தற்காலிக பணியாளர்கள் அனைத்து இடங்களிலும் நியமிக்கப்படவில்லை. உதாரணமாக ஒரு  பகுதியில் 375 பேருந்துகள் இயக்கப்பட்டால் 10 தற்காலிக பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

தொழிலாளர்கள் அவர்களது கோரிக்கை முன்வைத்து போராடுவது அவர்களோடு உரிமை. ஆனால் அவர்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்ற முடியுமா என்பது அவர்களுக்கே தெரியும். அவர்கள் வைத்த 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இன்னும் இரண்டு கோரிக்கைகள் நடைமுறைக்கு வரவுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி தேவைப்படும் இடங்களில் மட்டும் தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகளை இயக்கி வருவதாகவும், தமிழகம் முழுவதும் 20,000 பேருந்துகள் ஓடும் நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விபத்துக்கள் நடைபெறுவது முக்கியமான ஒன்றுதான்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களிடம் அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மண்டல குழு தலைவர் சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow