டி20 உலகக்கோப்பை இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்குமா? ரசிகர்கள் கவலை

பிப்ரவரி 15ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 

டி20 உலகக்கோப்பை இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்குமா? ரசிகர்கள் கவலை
டி20 உலகக்கோப்பை இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம், பாகிஸ்தான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு பயணம் செய்த ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் பிரதிநிதி முபஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் அமைச்சருமான மொஹ்சின் நக்வியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது இந்தியாவுடனான போட்டியில் விளையாட மூன்று நிபந்தனைகளை ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.தொடர் வருவாயில் அதிக பங்கு, இந்தியாவுடன் இருதரப்பு போட்டிகளை தொடங்க ஐசிசியின் உதவி மற்றும் பாகிஸ்தானுடன் விளையாடும்போது இந்திய வீரர்கள் மரபுபடி கைக்குலுக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் பாகிஸ்தான் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவரும், தங்கள் நாட்டுக்கு ஐசிசி தொடர் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தற்போது பாகிஸ்தானின் கோரிக்கை தொடர்பாக ஐசிசி மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 24 மணிநேரத்தில் பாகிஸ்தான் பிரதமருடன் ஆலோசனை நடத்தியப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow