சென்னை மழை: கண்காணிப்பாளர்கள் நியமனம்..தொடர்பு எண்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இதோ!

சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக IAS அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Oct 14, 2024 - 13:02
சென்னை மழை: கண்காணிப்பாளர்கள் நியமனம்..தொடர்பு எண்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இதோ!

சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக IAS அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கான IAS அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள், செயல் பொறியாளர்கள், மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவொற்றியூர் மண்டலத்திற்கு சமீரன் IAS, மணலி குமரவேல் பாண்டியன் IAS, மாதவரம் மேகநாத ரெட்டி IAS, தண்டையார்பேட்டை கண்ணன் IAS, ராயபுரம் ஜானிடாம் வர்கீஸ் IAS, திரு.வி.க.நகர் கணேசன் IAS ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், அம்பத்தூர் மண்டலத்திற்கு ராமன் IAS, அண்ணா நகர் ஸ்ரேயா பி.சிங்  IAS, தேனாம்பேட்டை  பிரதாப் IAS, கோடம்பாக்கம் விசாகன் IAS, வளசரவாக்கம் சிவஞானம்  IAS ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆலந்தூர் மண்டலத்திற்கு பிரபாகர் IAS, அடையாறு செந்தில் IAS, பெருங்குடி மகேஸ்வரி ரவிக்குமார்  IAS, சோழிங்கநல்லூர் உமா மகேஸ்வரி IAS உள்ளிட்டோரும்  வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow