வெற்றிக்கு அருகில் இந்தியா - ‘பேஷ்பால்’ கிரிக்கெட்டால் தொடரை இழக்கப்போகும் இங்கிலாந்து

Feb 25, 2024 - 17:44
Feb 25, 2024 - 17:53
வெற்றிக்கு அருகில் இந்தியா - ‘பேஷ்பால்’ கிரிக்கெட்டால் தொடரை இழக்கப்போகும் இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி வெற்றிக்கு அருகில் சென்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி, ஜார்கண்டில் உள்ள ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு இது அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகப் போட்டியில் விளையாடிய ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா 2 ரன்களிலும், சுப்மன் கில் 38 ரன்களிலும், ராஜட் படிதர் 17 ரன்களிலும், ஜடேஜா 12 ரன்களிலும் வெளியேறினர். இங்கிலாந்து பந்துவீச்சு தாக்குதலை சமாளித்து ஆடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்த்து வெளியேறினார். இதனால், நேற்று [24-02-24] இரண்டாவது நாள் முடிவில் 219 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. துருவ் ஜூரல் 30 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து 3ஆவது நாளில் விளையாடிய இந்திய அணியின் துருவ் ஜூரல் அரைச்சதம் அடித்தார். குல்தீப் யாதவ் 28 ரன்களிலும், முஹமது சிராஜ் 9 ரன்களிலும் வெளியேறினார். இங்கிலாந்தின் பந்துவீச்சை நேர்த்தியாக ஆடிய துருவ் ஜூரல், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90 ரன்களில் அவுட் ஆக இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

46 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜாக் கிராவ்லி மட்டுமே 60 ரன்கள் எடுத்தார். அரைச்சதத்தை தாண்டிய ஒரே வீரரும் அவரே. பென் டக்கர் 15 ரன்களில் வெளியேற, ஓலிவ் போப் முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனார்.

தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 4, ஜானி பேர்ஸ்டோ 30, டாம் ஹார்ட்லி 7, ஓலிவ் ராபின்சன் 0, என அடுத்து வெளியேறினர். பென் ஃபோக்ஸ் மட்டுமே டெஸ்ட் போட்டிகளுக்குரிய நிதான ஆட்டத்துடன் விளையாடினார். 67 பந்துகளை சந்தித்த அவர், 17 ரன்களில் அஸ்வின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் டக் அவுட் ஆகி வெளியேற இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதனால், 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 8 ஓவர்களில் 40 ரன்கள் குவித்தது. மேற்கொண்டு இந்திய அணி வெற்றிபெற 152 ரன்கள் மட்டுமே தேவை என்பதால், சுலபமாக இலக்கை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்தே, இங்கிலாந்து அணி ‘பேஷ்பால்’ கிரிக்கெட் எனப்படும் அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடி வருகிறது. இதனால், தொடக்கத்தில் சில வெற்றிகளை பெற்றிருந்தாலும், அதன் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பிட்ச்சின் தன்மைக்கு ஏற்றார்போல, டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்து அணி விளையாடவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நசீர் ஹுசைன் கூட, பேஷ்பாலை கைவிடுங்கள் என்று கூறியிருந்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரிலும் கூட வெற்றிக்கு அருகில் சென்ற நிலையில், 5 போட்டிகள் போன்ற தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்ய நேரிட்டது. லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்திலும், ஓவலில் நடைபெற்ற 5ஆவது டெஸ்ட் போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow