அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 14வது முறையாக நீட்டிப்பு-சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 11ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Jan 4, 2024 - 22:22
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 14வது முறையாக நீட்டிப்பு-சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டித்து ஜனவரி 11க்கு வழக்கை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த 2023 ஜூன் 14ல் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். 

அவரது ஜாமீன் மனு முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்ததை அடுத்து, அந்த மனு வாபஸ் பெறப்பட்டது. ஜாமீன் கோரி மீண்டும் அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த டிசம்பர் 15ம் தேதி 13வது முறையாக செந்நில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 4ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையல் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக காணொலிக் காட்சி மூலமாக ஆஜார்படுத்தபட்டார்.இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 11ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow