தமிழ்நாட்டில் ஒரு பக்கம் வெப்ப அலை... மறுபக்கம் ஜில் மழை.. 5 நாட்களுக்கு உஷார் மக்களே

வட தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம்

Apr 8, 2024 - 15:27
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் வெப்ப அலை... மறுபக்கம் ஜில் மழை.. 5 நாட்களுக்கு உஷார் மக்களே

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுவதால், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

10.04.2024 அன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

11.04.2024 அன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 12.04.2024 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

அதே நேரம், அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதர பகுதிகளில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். எனவே, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும். 

அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 12ஆம் தேதி வரை அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow