Gold price today:தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி...விலை எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கு விற்பனையானது. தொடர்ந்து செப்டம்பர் 4-ஆம் தேதியும் விலை உயர்ந்த நிலையில், செப்டம்பர் 5-ஆம் தேதி அதிரடியாக உயர்ந்து சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,530 என்ற நிலைக்கு வந்தது.
இதனிடையே, நேற்று (செப்.9) ஆபரணத் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் சரிவைச் சந்தித்தது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.14,145-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,040-க்கு விற்பனையாகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,255 என்ற விலையை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
What's Your Reaction?