சுவாமி வம்பானந்தா-பர்த்டே ட்ரீட்! யாருக்கு எல்லாம் ஸ்வீட் ?
“முதல்வர் அறியணையில் வரும் அவரது முதல் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் த.வெ.க. நிர்வாகிகளும், ரசிகர்களும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்கள்” என்று கூறியபடியே என்ட்ரி கொடுத்த வம்புவுக்கு பாதாம் பால் கொடுத்து வரவேற்ற சிஷ்யை, "அதிருக்கட்டும், முதல்வரின் சர்ப்ரைஸ் கச்சேரியை தொடங்கினார். ட்டூட் உண்டா சுவாமி?” என்று கேட்டு, அரசியல் "முதல்வர் விஜய்யின் 52வது பிறந்தநாள் ஜூன் 22 அன்று களைகட்டப் போகிறது.
அன்னதானம், ரத்த தானம், உயிரியல் பூங்காக்களில் இலவச அனுமதி என வெரைட்டியாக செலிபிரேட் செய்துவருகிறார்கள். இந்த நிலையில், விஜய் தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த 6 சிலிண்டர்கள், மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், மகளிருக்கு மாதம் ரூ.2500, முதியோர் உதவித் தொகை ரூ.3000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4000, தாய்மாமன் சீர், தாலிக்கு தங்கம் வழங்கும் அண்ணன் சீர் உள்ளிட்ட திட்டங்களில் ஏதாவது ஒன்றிரண்டையாவது பிறந்தநாள் பரிசாக முதல்வர் அறிவிப்பார் என மக்களிடம் ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால், நிதித்துறை அதிகாரிகளிடம் முதல்வர் தரப்பு அழுத்தமாகக் கேட்டும்கூட நிதிநிலையை காரணம் காட்டி அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை. இருப்பினும், 'பிறந்தநாள் அன்று ஏதாவதொரு திட்டத்தையாவது சர்ப்ரைஸாக அறிவிக்க வேண்டும்' என திட்டமிட்டிருக்கிறது முதல்வர் அலுவலகம். அநேகமாக மகளிர் இலவச பயணத் திட்டம் அறிவிக்கப்படலாம்"
"ஓஹோ... ரசிகர்களுக்கு?"
"ம்ம்... ஜனநாயகன் அப்டேட்ஸை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு மெர்சல் ரீரிலீஸ் அறிவிப்பு மட்டும்தான் சற்றே ஆறுதல். சென்சார் பிரச்னையால் தடைபட்டிருக்கும் ஜனநாயகன், திரைக்கு வரும் தேதியாவது வெளியாகுமா என அவரது ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், சென்சார் பிரச்னையே தீரவில்லை. ஒருவேளை சென்சார் அப்ரூவல் கிடைத்தாலும்கூட, ஓடிடியில் திரைப்படம் வெளியாகதான் அதிக வாய்ப்பு இருப்பதாகவும், திரையில் வெளியிடுவதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.
மேலும், திரைப்படத்தின் கதைக்களம் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை மையப்படுத்தி அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. த.வெ.க. ஆட்சியிலும் அப்பிரச்னைகள் பூதாகரமாகியிருக்கும் நிலையில், 'இப்போது திரைப்படம் வெளியானால் நம் ஆட்சிக்கு எதிராகவே அமைந்துவிடும். இப்போதைக்கு வெளியிட வேண்டாம்' என ஆளுந்தரப்பு முடிவெடுத்திருக்கிறதாம்."
What's Your Reaction?













