”மழை காலத்துல இத செய்யுங்க..” பிரதமர் கொடுத்த அட்வைஸ்

மழைகாலங்களில் தண்ணீரை சேமிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Sep 29, 2024 - 19:07
”மழை காலத்துல இத செய்யுங்க..” பிரதமர் கொடுத்த அட்வைஸ்

மழைகாலங்களில் தண்ணீரை சேமிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

மனதின் குரல் நிகழ்ச்சியின் 114-வது அமர்வில் பேசிய பிரதமர் மோடி, 10 ஆண்டுகளுக்கு முன் மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதி, விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்தில் பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது என்றும், எனது அமெரிக்கப் பயணத்தின் போது நமது பண்டைய கலைப்பொருட்களை அமெரிக்காவிடம் திரும்பப் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். 

வரவிருக்கும் பண்டிகை காலங்களில் மக்கள் 'மேக் இன் இந்தியா' பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே தேசத்தின் பல்வேறு பாகங்களில் கடும்மழை பெய்துவருவதை குறிப்பிட்ட அவர்,  நீரைச் சேமித்து வைப்பது எத்தனை அவசியமானது என்பதை இந்த மழைக்காலம் நமக்கு அறிவுறுத்துவதாக கூறினார். 

மழைக்கால நாட்களில் சேமிக்கப்படும் நீரானது, நீர் தட்டுப்பாடு மாதங்களில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது என்றும், இது தான் மழைநீரைச் சேமிப்போம் போன்ற இயக்கங்களின் உணர்வாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow