நாங்கள் அன்றே கணித்தோம்... நம்புனீர்களா? – ஆர்.பி.உதயகுமார் பேச்சு!

உதயநிதியை  துணை முதலமைச்சராக்குவதற்காக தான், பிரதமரை ஸ்டாலின் சந்தித்தார் என்று கூறினோம். ஆனால் அதனை யாரும் நம்பவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

Sep 29, 2024 - 19:10
நாங்கள் அன்றே கணித்தோம்... நம்புனீர்களா? – ஆர்.பி.உதயகுமார் பேச்சு!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட திருமங்கலம் ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்,0 திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினர். 

தொண்டர்களிடையே உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “குடும்ப அரசியல்... வாரிசு அரசியல்.. தமிழக சட்ட ஒழுங்கு.. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் தொண்டர்கள் உழைப்பையும் நேரத்தையும் கட்சிக்காக செலவழிக்க வேண்டும் நீங்கள் சற்று அசந்து விட்டால், தமிழ்நாடு என்று அண்ணா  சூட்டிய பெயர் இருக்காது. கருணாநிதி நாடு என்று மாற்றி விடுவார்கள். 

பாரதப் பிரதமரை ஸ்டாலின் சந்திக்க சென்றது தமிழகத்திற்கு நிதி வாங்க அல்ல அவரது மகனை துணை முதல்வராக அமர வைக்க போகிறேன். அதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்கத்தான் செல்கிறார் என்று நாங்கள் கூறினோம். ஆனால் நீங்கள் நம்பவில்லை. டெல்லியில் இருந்து வந்தவுடன் பவள விழா மாநாடு என்று சொல்கிறார்கள். ஏற்கனவே பவள விழா மாநாடு நடத்தி இருந்த நிலையில், உதயநிதியை கூட்டணிக் கட்சிகளின் ஆசி வாங்கி துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் மாநாடு நடத்தி உள்ளார். இதைத் தவிர ஸ்டாலினுக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. எனவே தொண்டர்கள் உழைத்து மீண்டும் எடப்பாடியை ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும்” என பேசினார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow