விவசாயத்தை நினைவுகூறும் வகையில் 3 டன் கரும்பினால் ஆன குடிசை

3 டன் எடையுள்ள செங்கரும்பினால் பாரம்பரிய குடிசையை அமைத்துள்ளார்.இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்

Jan 15, 2024 - 22:06
விவசாயத்தை நினைவுகூறும் வகையில் 3 டன் கரும்பினால் ஆன குடிசை

காஞ்சிபுரம் அருகே நமது பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும், விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் 3டன் எடையுள்ள  செங்கரும்பினால் ஆன குடிசை அமைத்து பொங்கல் திருநாளை கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளான இன்று தமிழர்கள் அனைவரும் அதிகாலை எழுந்து புத்தாடை அணிந்து சூரிய பகவானுக்கு பொங்கல் படையல் இட்டு வெகு விமரிசையாக பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கீழ்க்கதிப்பூர் அடுத்த மதுரா குண்டு குளம் பகுதியில் விவசாயி செந்தில்குமார் என்பவர் வருங்கால சங்கதியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் நமது பாரம்பரிய குடிசையை நினைவு கூறும் வகையில்,3 டன் எடையுள்ள செங்கரும்பினால் பாரம்பரிய குடிசையை அமைத்து தனது குடும்பத்தார் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்.

மேலும் இந்த செங்கரும்பினால் ஆன குடிசையை ஏராளமான பொதுமக்கள் வியப்புடனும் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.  தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் கட்டுமான துறையில் கட்டிடங்கள் பல மாடல் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அதீத வளர்ச்சி பெற்று வரும் நிலையில் நாம் நமது முன்னோர்கள் வாழ்ந்த குடிசையை தற்போதைய இளம் தலைமுறையினரும், இளம் சங்கதியினருக்கும் தொடர்ந்து நாம் நினைவு கூற வேண்டும் என தோன்றிய எண்ணத்திலும், குறிப்பாக விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் தான் இந்த செங்கரும்பினால் குடிசையை அமைத்து பொங்கல் கொண்டாடினோம் என விவசாயி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow