சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான விண்ணப்பம்... கால அவகாசம் இன்று மாலை வரை நீட்டிப்பு...

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Mar 6, 2024 - 09:35
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான விண்ணப்பம்... கால அவகாசம் இன்று மாலை வரை நீட்டிப்பு...

வரும் மே மாதம் 26-ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெறவுள்ளது. சுமார் 1,056 இடங்களுக்காக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (05.03.2024) மாலையுடன் நிறைவடைய இருந்தது. கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், இன்று(06.03.2024) மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் upsconline.nic.in இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு தகுதி உடையவர்களாக கருதப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow