Aranmanai 4 Box office: சொல்லி அடித்த சுந்தர் சி… வசூலில் மிரட்டும் அரண்மனை 4!

சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 திரைப்படம் கடந்த வாரம் வெள்ளி கிழமை வெளியானது. இந்தப் படத்தின் முதல் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கோலிவுட்டையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

May 6, 2024 - 14:17
Aranmanai 4 Box office: சொல்லி அடித்த சுந்தர் சி… வசூலில் மிரட்டும் அரண்மனை 4!

சென்னை: இந்தாண்டு தமிழில் ரிலீஸான படங்களில் அரண்மனை 4 தரமான சம்பவம் செய்துள்ளது. சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தில் அவருடன் தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். அரண்மனை சீரிஸில் இதுவரை 3 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், 4வது பாகமும் அதே காமெடி ப்ளஸ் ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது. அதேநேரம் அரண்மனை 2, 3வது பாகங்கள் எதிர்பார்த்த வெற்றிப் பெறவில்லை. ஆனால், தற்போது ரிலீஸான அரண்மனை 4 பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டியுள்ளது.  

சுந்தர் சியின் தங்கை தமன்னாவும் அவரது கணவர் சந்தோஷ் பிரதாப்பும் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர். அவர்களது மரணத்திற்கு என்ன காரணம் என்பதை சுந்தர் சி கண்டுபிடிப்பதே இந்தப் படத்தின் ஒன்லைன். இதனை காமெடி, எமோஷனல், சென்டிமெண்ட், ஆக்‌ஷன் என பக்கா கமர்சியல் மெட்டீரியலாக இயக்கியுள்ளார் சுந்தர் சி. அதேபோல் இந்த முறை பாக் என்ற பேயை அறிமுகம் செய்து ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

இதனால் அரண்மனை 4 படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இந்தப் படம் எதிர்பார்க்காத சம்பவம் செய்துள்ளது. அதன்படி முதல் நாளில் 4.65 கோடி ரூபாய் வரை வசூலித்த அரண்மனை 4, இரண்டாவது நாளில் 6.65 கோடி கலெக்‌ஷன் செய்தது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் அரண்மனை 4 வசூல் அதிகரித்துள்ளது. அதன்படி இந்தப் படம், 7.50 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளது. ஆகமொத்தம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 19 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல் வாரத்தில் அரண்மனை 4 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 20 கோடியை நெருங்கிவிட்டதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தை குஷ்பு சொந்தமாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow