Dhanush Sivakarthikeyan: தனுஷ், சிவகார்த்திகேயன் கூட்டணி...? கருடன் இயக்குநர் கொடுத்த அப்டேட்!

தனுஷும் சிவகார்த்திகேயனும் மீண்டும் இணைவது குறித்து கருடன் இயக்குநர் துரை செந்தில்குமார் மனம் திறந்துள்ளார்.

May 28, 2024 - 15:57
Dhanush Sivakarthikeyan: தனுஷ், சிவகார்த்திகேயன் கூட்டணி...? கருடன் இயக்குநர் கொடுத்த அப்டேட்!

சென்னை: துரை செந்தில்குமார் இயக்கியுள்ள கருடன் திரைப்படம் வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது. சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கிய விடுதலைக்குப் பின்னர் கருடன் படத்தில் சூரி லீடிங் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து குமுதம் சேனலுக்கு இயக்குநர் துரை செந்தில்குமார் கொடுத்த பேட்டியில், விடுதலை ஷூட்டிங் ஸ்பாட்டில் சூரியிடம் இந்த கதை சொன்னதாகவும், அவருக்கு பிடித்துப்போனதால் படப்பிடிப்புக்குச் சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும், சொக்கன் என்ற கேரக்டரில் சூரி நடித்துள்ளதாகவும், இந்தப் படத்தின் கதை ஒரு கோயில் பின்ணியில் இருக்கும் என்பதால், கருடன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

அதேபோல், கருடன் படத்தில் சூரி நடித்துள்ள ஆக்ஷன் காட்சிகள் தரமாக வந்துள்ளதாகவும், அதனை பிளான் செய்து ஷூட் செய்தோம் என்றும் துரை செந்தில்குமார் கூறியுள்ளார். சசிகுமாரிடம் சூரியே கால்ஷீட் வாங்கியதாக கூறிய துரை செந்தில்குமார், மல்லுவுட் நடிகர் உன்னி முகுந்தனும் கதை பிடித்துவிட்டதால் உடனே ஓக்கே சொல்லிவிட்டார் என்றார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அருமையாக வந்துள்ளதாகவும் இயக்குநர் துரை செந்தில்குமார் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இதனிடையே தனது பாலுமகேந்திரா குறித்து பேசிய துரை செந்தில்குமார், அவருக்கு சிறப்பு செய்ய எங்களால் முடிந்த பணிகளை செய்வோம் என்றும், அவரது பெருமை, சாதனைகள் சொல்கிற மாதிரி பல விஷயங்கள் செய்வோம் எனவும் கூறியுள்ளார்.  

முக்கியமாக தனுஷ், சிவகார்த்திகேயன் குறித்து பேசிய துரை செந்தில்குமார், தனுஷ் நடிப்பில் பட்டாசு, கொடி படங்களை இயக்கினேன். சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கிக் சட்டை படங்களை இயக்கினேன். அதன்பின்னர் அவர்கள் இருவரையும் பார்க்கும் அமையவில்லை, வருங்காலத்தில் பழைய படி இருவரும் இணையலாம், அது காலத்தின் கையில் இருக்கிறது எனக் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலத்தில் அவரை ஹீரோவாக நடிக்க வைத்து படம் தயாரித்தவர் தனுஷ். ஆரம்பத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், சில ஆண்டுகளாக அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனுஷ் – சிவகார்த்திகேயன் மீண்டும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் துரை செந்தில்குமார் தனது அடுத்தப் படத்தின் ஹீரோ குறித்தும் தெரிவித்துள்ளார். அதன்படி, லெஜன்ட் படத்துக்குபின் அவர் என் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow