பிரபல ரவுடி என்கவுண்டர் - பேனர் அடித்து வாழ்த்திய கேரள மக்கள்

சென்னை வியாசர்பாடியில் பிரபல ரவுடியை சுட்டுக் கொன்ற தமிழ்நாடு காவல்துறையினரை வாழ்த்தி கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?

Sep 21, 2024 - 17:49
பிரபல ரவுடி என்கவுண்டர் - பேனர் அடித்து வாழ்த்திய கேரள மக்கள்
banner

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையைப் பாராட்டி கேரளாவின் குறிப்பிட்ட பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. 

கடந்த புதன்கிழமையன்று  அன்று பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி வியாசர்பாடி பி.எஸ்.என்.எல் குடியிருப்பு பகுதியில் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில்,  வியாசர்பாடி பி.எஸ்.என்.எல் குடியிருப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியே வந்த ஒருவர் காவலர்களைப் பார்த்ததும் திடீரெனத் தப்பி ஓடியுள்ளார். அவரைப் பிடிக்க முயன்ற போது தன் கையில் உள்ள துப்பாக்கியால் போலீசை நோக்கி அந்த நபர் சுட்டுள்ளார். அப்போது காவலர்கள் தற்காப்புக்காகத் திருப்பி சுட்ட போது அந்த நபர் உயிரிழந்துள்ளார். 

அதன் பிறகு விசாரணை செய்தபோதுதான் இறந்தவர் பிரபல ரவுடியான காக்காத்தோப்பு பாலாஜி என தெரிய வந்ததாக கூறப்படுகிறது. ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு கொலை வழக்குகள் உட்பட 59 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அன்று அவரோடு பயணித்த சத்தியமூர்த்தி என்பவர் 10 கிலோ கஞ்சாவை கடத்தியதாக  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை தமிழ்நாடு காவல்துறையினர் சுட்டுக் கொன்றதற்குப் பாராட்டு தெரிவித்து கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் சில இடங்களில் அப்பகுதி மக்கள் மலையாளத்தில் பேனர் வைத்துள்ளனர். 

சென்னை வியாசர்பாடியில் நடந்த என்கவுண்டருக்கு கேரள மக்கள் எதற்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்என விசாரணை செய்த போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ஜூலை மாதத்திலிருந்துது ஒன்றரை மாதம் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம் பெரம்பரா (perambara) பகுதியில் தலைமுறைவாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த தமிழக தனிப்படை போலீசார் கோழிக்கோடு சென்று ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இருக்கும் இடத்தை மஃப்டியில் சுற்றி வளைத்துள்ளனர்.

அங்குள்ள வீட்டின் கதவைத் தட்டி போலீசார் விசாரிக்கும் பொழுது பெண் ஒருவர் பதில் அளித்துள்ளார். வந்தவர்கள் தமிழக காவல்துறையினர் என தெரியாமல் அச்0சப்பட்டு கதவை மூடி உள்ளார். அதைப் பார்த்த தனிப்படையினர் அப்பெண் காக்காத் தோப்பு பாலாஜியை மறைத்து வைக்க முயல்கிறார்  என நினைத்து வீட்டில் உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர். 

அப்போது அப்பகுதியில் உள்ள கேரள மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அதன்பிறகு விசாரணை செய்தபோதுதான் தமிழக காவல்துறையினர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை பிடிக்க வந்தது கேரள மக்களுக்கு தெரியவந்தது.

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை வழக்கு உள்ளிட்ட 59 வழக்குகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு விசாரணை செய்த போது போலீசார் காக்கா தோப்பு பாலாஜி இருக்கும் வீட்டிற்கு பதிலாக வேறு வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. அருகில் ராஜேஷ் என்ற விவசாயி மூலமாக ஒரு வீட்டில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.

காக்கா தோப்பு பாலாஜி முதலில் வந்தபோது அக்கம்பக்கத்தினர் ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்ததாக நினைத்துள்ளனர். ஆனால் அடிக்கடி கோழிக்கறி வாங்கிச் சென்று சாப்பிட்ட போது அங்குள்ள மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சையின் போது மாமிசம் சாப்பிடாமல் தானே இருப்பார்கள் என்று சந்தேகித்துள்ளனர். அதன் பிறகு போலீசார் வந்து ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை துப்பாக்கி முனையில் கைது செய்ய முற்பட முயன்ற போதுதான் தங்கள் பகுதியில் தங்கியிருந்தது மிகப்பெரிய ரவுடி என்பதை மக்கள் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோழிக்கோடு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தங்கியது தெரியவந்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு வந்த ராஜேஷ் என்பவர் வாலிபால் விளையாட்டு பார்க்க வந்தபோது அவருக்கும் ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  காக்கா தோப்பு பாலாஜி மீது பல கொலை வழக்குகள் இருப்பது தெரியாமல் அவர் பழகியதாகவும் சிகிச்சை ஒன்றிற்காக நட்பின் அடிப்படையில் கோழிக்கோடு அழைத்து வந்து தங்க வைத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் அங்கிருக்கும் சூழல் பிடித்துப் போய் தொழில் துவங்குவதற்கான நடவடிக்கையில் ரவுடி பாலாஜி ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக போலீசார் தேடிவந்த போது பரபரப்பு ஏற்பட்ட காரணத்தினால் ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு எப்படியோ தகவல் தெரிந்து தப்பிச் சென்றுள்ளார். மீண்டும் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி நமது பகுதிக்கு வர வாய்ப்புள்ளது என கோழிக்கோடு பெரம்பரா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் தமிழக போலீசார் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை சுட்டுக்கொன்ற தகவல் அறிந்து  அச்சத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். இதனால் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை என்கவுண்டர் செய்து சுட்டுக்கொன்ற தமிழக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் பேனர்கள் வைத்து கேரள பாராட்டு தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow