நீதிமன்றதில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 23ம் தேதி எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

Dec 15, 2023 - 16:47
Dec 15, 2023 - 17:48
நீதிமன்றதில்  எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு 

முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 23ம் தேதி நேரில் ஆஜராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக கட்சியின் உறுப்பினர் அட்டைகளை போலியாக வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கில் தன்னை பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் தனக்கும், தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை ஜார்ஜ் டவுன் நடுவர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தொடர்ந்து நடத்த வேண்டுமென உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 23ம் தேதி எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow