பிப்ரவரி 21-ல் நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: சீமான் அறிவிப்பு 

பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள நாம் தமிழர் கட்சி மாநாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிமுக செய்ய உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

பிப்ரவரி 21-ல் நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: சீமான் அறிவிப்பு 
நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: சீமான் அறிவிப்பு 

நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் பிரிவு ஆலோசனை கூட்டம் இன்று கோயம்பேட்டில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பிறகு சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலையொட்டி பிப்ரவரி 21-ந் தேதி திருச்சி மாநாட்டில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளேன். யாரை சேர்ப்பது, யாருடன் செல்வது என்ற எந்தவித குழப்பமும் இன்றி நாங்கள் தனியாக பயணிக்க உள்ளோம். திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையேயான போட்டி என்பது, ஓட்டுக்கு யார் அதிகமாகப் பணம் கொடுப்பது என்பதில் மட்டும்தான் இருக்கிறது. 

பொங்கலுக்கு ரூ.6800 கோடி இலவசமாக  கொடுத்து உள்ளார்கள். இது ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட பணம் தான். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கொடுக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆசிரியர்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் அரசு இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நடுரோட்டில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்களும், துப்புரவு பணியாளர்கள் என எல்லோரும் வீதியில் நிற்கிறார்கள். ஆனால் நல்லாட்சி நடப்பதாக கூறுகிறார்கள்.

பிரபாகரன் பிள்ளைகளின் காலம். தமிழ் தேசியம் எழுச்சி பெற்றுள்ளது. பெரியாரை சீமான் எதிர்த்து பேசி விட்டார். அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று தேர்தல் காலத்தில் ஒருத்தனாவது பேச முடியுமா? பெரியாரை நாங்கள் போற்றுகிறோம் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று உங்களால் கேட்க முடியுமா? எந்த தலைவனுக்கு இங்கு ஓட்டு உள்ளது.

எனக்கு விழுந்த ஓட்டு எனது கொள்கைக்காக விழுந்த ஓட்டு. பணம் கொடுக்காமல் எனக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா? .பெரியாரை நாங்கள் பேசும் முன்னே திருமாவளவன் கடுமையாக பேசி உள்ளார். அண்ணா, கலைஞருமே பெரியாரைப் பற்றி பேசி உள்ளார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோர் எனது ரோல் மாடல் என்று விஜய் கூறி இருப்பது பற்றி கேட்கிறீர்கள். அது தம்பியின் விருப்பம். அவர்களை ஏற்றுக்கொண்டது எப்படி? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow