அசாமில் பிரதமர் மோடி… ஆனை மேல அம்பாரி செய்த பிரதமர் மோடி...

காசிரங்கா தேசிய பூங்காவில் யானைமேல் அம்பாரி சென்ற பிரதமர் மோடி, யானைகளுக்கு கரும்பு அளித்து மகிழ்ந்தார்.

Mar 9, 2024 - 11:42
அசாமில் பிரதமர் மோடி… ஆனை மேல அம்பாரி செய்த பிரதமர் மோடி...

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அசாம், மேற்கு வங்கம் உட்பட 4 மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை அசாம் சென்றடைந்த அவரை அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வரவேற்றார். இன்று காலை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்காவிற்கு சென்றார். அங்கு, ஜீப் மூலம் காண்டா மிருகம், புலி உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசித்தர்.

இதையடுத்து, அங்கு யானை சவாரி செய்த அவர், 3 யானைகளுக்கு கரும்பு கொடுத்தார். இதையடுத்து, அங்கு பணியாற்றும் பெண் வனக்காவலர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின் விக்சிட் பாரத் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow