பல்லு இருக்குதுன்றதுக்காக இப்படியா..? 2வது கள்ளக்காதலியின் பிடியில் கணவர்... மீட்டுத்தரக்கோரி மனைவி போலீசில் புகார்

2வது கள்ளகாதலியின் பிடியில் இருக்கும் கணவரையும், 22 சவரன் நகையையும் மீட்டுத்தரக்கோரி மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

Apr 7, 2024 - 19:05
பல்லு இருக்குதுன்றதுக்காக இப்படியா..? 2வது கள்ளக்காதலியின் பிடியில் கணவர்... மீட்டுத்தரக்கோரி மனைவி போலீசில் புகார்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஈஸ்வரன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமுத்து. ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியரான இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த பூர்ணிமா தேவி என்பவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டும் திருமணம் நடைபெற்றுள்ளது. சில ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 


இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு சிவகங்கையில் வேலைபார்த்த மணிமுத்துவுக்கு, பரமக்குடி எமனேஸ்வரத்தை சேர்ந்த உறவினரான வேதமுத்துவின் மனைவி ராஜேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதால், ராஜேஸ்வரி, மணிமுத்து மீது சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த பிரச்சனையை சரி செய்ய பூர்ணிமா தேவி ராஜேஸ்வரிக்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்து பிரச்சினையை முடித்து வைத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ராஜேஸ்வரி தான் அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.


பிரச்சினை முடிந்தவுடன் தனது வேலையை காட்டத் தொடங்கிய மணிமுத்து, பரமக்குடி அரசு ஐடிஐ தையல் பயிற்றுனராக வேலை பார்த்து வரும் செபஸ்டியான் ரூபி என்பவரிடம் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டுள்ளார்.  இதுமட்டுமல்லாமல் பரமக்குடி அரசு ஐடிஐ எதிரிலேயே தனியாக வீடு எடுத்து இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வருகின்றனர். 


வீடு எடுத்து தங்கிய அன்றிலிருந்து வார நாட்களில் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டிருக்கிறார் மணிமுத்து. மேலும் குடும்ப செலவிற்கு பணமும் கொடுக்காமல் வார இறுதி நாட்களில் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று பூர்ணிமா தேவியை அசைவ உணவுகளை சமைக்க வைத்து தனது நண்பர்களுடன் மது அருந்தி கும்மாளம் அடித்துள்ளார். 


இதை தட்டி கேட்ட மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை அடித்து வெளியே துரத்தி கதவை பூட்டி உள்ளார். மூவரும் நடு இரவு வரை வீட்டின் வெளியிலேயே நின்று கொண்டிருந்ததை பார்த்த பூர்ணிமா தேவியின் தந்தை தனது மகளையும் பேரக் குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் உறவினர்கள் துணையோடு தனது கணவரிடம் சென்ற பூர்ணிமா தேவி, குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். அப்போது மணிமுத்து பூர்ணிமா தேவியை பார்த்து எனக்கு ஏத்த மனைவி நீ இல்ல உன் கூட வாழ முடியாது எனக்கூறி ஆபாசமாக திட்டி விரட்டி அடித்துள்ளார். 

இதனால் மனமுடைந்த பூர்ணிமா தேவி, செபஸ்டியான் மேரியிடம் இருந்து, கணவரையும் தனது 22 சவரன் நகையையும் மீட்டு தர வேண்டும் என பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow