பெண் அதிகாரிக்கு வேலை.. "பேச்சில் பெண்சக்தி, நடைமுறையில் ஆணாதிக்கம் !" மத்திய அரசை விளாசிய உச்சநீதிமன்றம்..! 

ஆணாதிக்க மனநிலையில்தான் இருக்கிறீர்கள் என மத்திய அரசை உச்சநீதிமன்றம் சாடியது.

Feb 20, 2024 - 11:45
பெண் அதிகாரிக்கு வேலை.. "பேச்சில் பெண்சக்தி,  நடைமுறையில் ஆணாதிக்கம் !" மத்திய அரசை விளாசிய உச்சநீதிமன்றம்..! 

பெண் சக்தி எனப்பேசி வரும் நீங்கள், ஆணாதிக்க மனநிலையில்தான் இருக்கிறீர்கள் என கடலோர காவல்படை பெண் அதிகாரியின் நிரந்தரப் பணியை மறுத்த வழக்கில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.  

கடலோர காவல்படையின் பெண் குழுவின் ஒரு பகுதியாக 14 ஆண்டுகளாக  பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். ஆண்களுக்கு இணையாக பதவி உயர்வு வழங்கி அதிகாரிகளாக பணியாற்ற தன்னை அனுமதிக்க வேண்டும் என்ற இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். 

இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ராணுவம் - கடற்படையில் பெண்கள் வீரியத்துடன் பணியாற்றும் நிலையில், கடலோர காவல்துறையில் ஆணாதிக்கப் போக்கு நிலவுவது ஏன் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். கடலோர காவல்படையில் பெண்கள் இருக்க முடியாது எனக்கூறிய காலம் மலையேறி விட்டது எனவும் பெண்களும் கடற்கரையை பாதுகாக்க முடியும் எனவும் கூறினர்.

உடலியல் வரம்புகள், சமூக விதிமுறைகள் எனக்கூறும் மத்திய அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல எனவும், சமத்துவ - பாலின சார்புக்கு அவை எதிரானது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பெண் சக்தி எனப்பேசி வரும் நீங்கள், ஆணாதிக்க மனநிலையில்தான் இருக்கிறீர்கள் என மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்றம், இது மத்திய அரசுக்கு இழுக்கு எனவும் விமர்சித்தது. பெண்களுக்கு நிரந்தரப் பதவி மறுக்கப்படுவது ஆணாதிக்கப்போக்கு தான் எனவும் மத்திய அரசிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow