காலையில் ராஜினாமா.. மாலையில் பதவி ஏற்பு !

பாஜக ஆதரவுடன் மீண்டும் 9-வது முறையாக பிஹாரில் முதலமைச்சராக பதவி ஏற்றார் நிதீஷ் குமார். கடந்த 23 ஆண்டுகளில் 4-வது முறையாக பாஜக கூட்டணிக்கு மாறினார் நிதிஷ்குமார்.

Jan 29, 2024 - 15:18
காலையில் ராஜினாமா.. மாலையில் பதவி ஏற்பு !

பாஜக ஆதரவுடன் மீண்டும்  9-வது முறையாக பிஹாரில் முதலமைச்சராக பதவி ஏற்றார் நிதீஷ் குமார். கடந்த 23 ஆண்டுகளில் 4-வது முறையாக பாஜக கூட்டணிக்கு மாறினார் நிதிஷ்குமார்.

மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறி 9-வது முறையாக பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் நேற்று தலைநகர் பாட்னாவில், பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார் நிதிஷ் குமார்.

இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு பின்பு, பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியுடன் சேர்ந்து முதல்வராக தொடர்ந்து வந்தார் மேலும் அகில இந்திய அளவில் ’இந்தியா’ கூட்டணியிலும் அங்கம் வகித்து வந்தார் நிதிஷ்குமார். அதன் தொடர்ச்சியாக பதவி ஏற்பு நிகழ்வு முடிந்த பிறகு செய்தியாளர்க்கை சந்தித்து பேசிய நிதிஷ்குமார், எங்கு இருந்து சென்றேனோ அங்கேயே  மீண்டும் வந்துள்ளேன் என தெரிவித்துளார். மேலும் நான் எப்படி இந்த மகாத்பந்தன் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு வந்தேன், எப்படி பல கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா  கூட்டணியை உருவாக்கினேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என தெரிவித்தார். ஆனால்  இதில் சில விஷயங்கள் சரியாக நடைபெறவில்லை. என்றும் எனது  கட்சியில் உள்ளவர்களுக்கும் அது சரியாக தோணவில்லை என்றும் தெரிவித்தார்.

அதனைதொடர்ந்து பாஜக தலைவர்களான சாம்ராட் சவுத்ரி, சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ​​ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றுள்ளனர். கூட்டணி இனி அப்படியே இருக்கும். இன்று எட்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.  மேலும் மீதமுள்ளவர்கள் விரைவில் பதவியேற்பார்கள். சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என நிதீஷ் குமார் தெரிவித்தார்.

மேலும் இந்நிலையில் பீகார், முன்னாள் துணை முதல்வரும், லாலு யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் நிதிஷ்குமார் முடிவு பற்றி தெரிவிக்கும் போது  நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 2024-ல் முடிந்துவிடும் எனவும் இனி தான் ஆட்டம் ஆரம்பம் என தெரிவித்தது குறித்தும் நிதிஷ்குமாரிடம்  கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதிஷ்குமார் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக தனது ஜனதா தளம் கட்சி பாடுபடும் என்றும், துணை முதல்வராக தேஜஸ்வி இருந்த போது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இப்போது NDA முன்னர் இருந்த இடத்திற்கு திரும்பிவிட்டேன்.  இனி வேறு எங்கும் செல்லும் கேள்விக்கே இடமில்லை என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow