AI கருவிகளை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் ஞாபகத்திறன் பாதிக்கப்படுமா? ஆய்வில் பகீர்.!

ChatGPT, Claude, Gemini உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அதிகமாக நம்பி பயன்படுத்துவது, மனிதர்களின் சிந்தனை மற்றும் ஞாபகத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என இத்தாலியைச் சேர்ந்த செனாய் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jul 15, 2026 - 14:02
AI கருவிகளை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் ஞாபகத்திறன் பாதிக்கப்படுமா? ஆய்வில் பகீர்.!

இந்த ஆய்வின்படி, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, புதிர்களைத் தீர்ப்பது, தகவல்களை பகுப்பாய்வு செய்வது, சுயமாக சிந்தித்து முடிவெடுப்பது போன்ற செயல்பாடுகள் மூளையை தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கச் செய்கின்றன. ஆனால், இத்தகைய பணிகளுக்கெல்லாம் முழுமையாக AI கருவிகளை மட்டுமே சார்ந்து செயல்படுவது, மனித மூளையின் இயல்பான சிந்தனைத் திறனை குறைக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், தகவல்களை மனதில் பதியவைத்து நினைவில் வைத்திருக்கும் திறனும், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனும் குறையும் அபாயம் இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், AI தொழில்நுட்பத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதனை உதவிக் கருவியாக மட்டுமே பயன்படுத்தி, சுய சிந்தனை மற்றும் கற்றல் பழக்கத்தை தொடர்வதே மூளையின் செயல்திறனை பாதுகாக்கும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இத்தகைய செயல்களை AI கருவிகளிடம் முழுமையாக ஒப்படைக்கும்போது, மூளைக்கு கிடைக்கும் பயிற்சி குறைய வாய்ப்பு உள்ளது. இதனை ஆய்வாளர்கள் "Cognitive Offloading" என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்களையும், சிந்திக்க வேண்டிய பணிகளையும் வெளிப்புற தொழில்நுட்பங்களிடம் ஒப்படைக்கும் பழக்கம். இது காலப்போக்கில் தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளும் திறனையும், சுயமாக சிந்திக்கும் பழக்கத்தையும் குறைக்கக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், AI கருவிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். கற்றல், ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு, தகவல் சேகரிப்பு மற்றும் படைப்பாற்றல் மேம்பாடு போன்ற பணிகளில் AI-யை ஒரு உதவிக் கருவியாக பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு பணிக்கும் AI-யையே முழுமையாக சார்ந்து இருப்பதை விட, சுய சிந்தனை மற்றும் கற்றல் பழக்கத்தை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதே மூளையின் செயல்திறனையும் நினைவாற்றலையும் பாதுகாக்கும் சிறந்த வழியாக கருதப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow