TOXIC ஷூட்டிங்கிற்கு பிறகு S*X-ல் ஈடுபட்டார்களா யாஷ் – கியாரா?

டாக்ஸிக் பட ஷூட்டிங்கிற்கு பிறகு நடிகர் யாஷ்ஷும் கியாரா அத்வானியும் நிஜமாகவே உடலுறவு கொண்டார்கள் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதுகுறித்த உண்மைத்தன்மை என்ன என்பதை பார்ப்போம்.

Jul 9, 2026 - 20:00
TOXIC ஷூட்டிங்கிற்கு பிறகு S*X-ல் ஈடுபட்டார்களா யாஷ் – கியாரா?

நடிகையும், இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் முதல் ப்ரோமோ வெளியாகிய நாளிலிருந்தே அதன் டார்க் டோன், கவர்ச்சியான காட்சிகள் மற்றும் ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. தற்போது வெளியாகியுள்ள 'தபாஹி' பாடல், அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. யாஷ் மற்றும் கியாரா அத்வானி இடையேயான ரொமான்டிக் காட்சிகள், பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் ஸ்டைலிஷ் ஒளிப்பதிவு ஆகியவை சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.

இந்த நிலையில், நடிகர் யாஷ் மற்றும் நடிகை கியாரா அத்வானி இருவரையும் பற்றிய ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

படப்பிடிப்பு முடிந்த பிறகு யாஷ் மற்றும் கியாரா அத்வானி தனிப்பட்ட உறவில் இருந்ததாகவும், அதுகுறித்து பல்வேறு பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. 

இதற்கு முன்பும் டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷ் மற்றும் கியாரா அத்வானி இடையேயான நெருக்கமான காட்சிகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. குறிப்பாக, அந்தக் காட்சிகளை நீக்குமாறு கியாரா கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் குறித்து அவர் நேரடியாக பதிலளித்து, "Absolute nonsense" (முற்றிலும் அபத்தம்) என்று மறுத்திருந்தார்.

தற்போது வெளியாகியுள்ள "தபாஹி (Tabaahi)" பாடல் மற்றும் யாஷ் - கியாரா அத்வானியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இதில் இருவரும் படுநெருக்கமாக இருப்பதை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ஆதாரமற்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow