திருப்பதியில் மொட்டை அடிக்க 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் மொட்டை அடிக்க தேவைக்காக ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பி.ஸ்ரீதர் நன்கொடையாக வழங்கினார்.
திருப்பதியில் தினசரி மொட்டை அடிப்பவர்களின் எண்ணிக்கை மாறுபடும், மொட்டை அடிக்கும் பணியில் 1,158 ஆனால் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இது 20,000 முதல் 40,000 வரை இருக்கலாம், புரட்டாசி போன்ற மாதங்களில் 50,000-க்கும் மேல் செல்கிறது;
சமீபத்திய தகவலின்படி, ஒரே நாளில் 49,088 பேர் மொட்டை அடித்ததே அதிகபட்சம் என்றும், சராசரியாக ஒரு நாளைக்கு 1 டன் தலைமுடி காணிக்கையாக வருகிறது என்றும் கூறப்படுகிறது. அதிகபட்ச எண்ணிக்கை: புரட்டாசி மாதத்தின் ஒரு சனிக்கிழமை அன்று மட்டும் 49,088 பக்தர்கள் மொட்டை அடித்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த வெர்ட்டிகல் குளோபல் எனும் நிறுவனத்தின் இயக்குநரான பி.ஸ்ரீதர் நேற்று திருமலையில் தனது குடும்பத்தாருடன் இணைந்து அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடுவை சந்தித்தார். அப்போது ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகளை அவரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஸ்ரீதர் கூறுகையில், “திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். இதில் ஒருவருக்கு பாதி பிளேடு வீதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுக்கு ரூ.1.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.
இதனால் எனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பாதி பிளேடுகளை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கி உள்ளேன். உலகிலேயே எனது நிறுவனம் தான் முதன்முதலில் பாதி பிளேடுகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
பாதி பிளேடுகள் விற்பனை அமெரிக்கா, ஐரோப்பா உட்பட 52 நாடுகளில் புகழ்பெற்று விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?

