திமுகவா? தவெகவா?இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு யாருக்கு ?

திமுகவா? தவெகவா? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு யாருக்கு என்பது அக்கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

Sep 12, 2026 - 15:30
திமுகவா? தவெகவா?இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு யாருக்கு ?
DMK or TVK? Communist's Key Decision on Bypoll Support

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு தேர்தல் கணக்குகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது.

இரு தொகுதிகளிலும் சூடுபிடிக்கும் தேர்தல் களம் :

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் வழக்குகள் காரணமாக 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) தொகுதியிலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி) தொகுதியிலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்துக்கு தயாராகி வருகின்றன.

இரு தொகுதிகளிலும் திமுக தனது வேட்பாளர்களை முதலில் அறிவித்தது. மதுராந்தகம் தொகுதியில் வழக்கறிஞர் ஐ. பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகமும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் தவெக சார்பில் போட்டியிடுகின்றனர். இருவரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இதே தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற பிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

 கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவை எதிர்நோக்கும் அரசியல் கட்சிகள் :

இந்த சூழலில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  கம்யூனிஸ்ட் கட்சிகள், வழக்கமாக கூட்டணி கட்சிகளின் தேர்தல் நிலைப்பாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதன் முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரத்தில், புதிய அரசியல் சக்தியாக களமிறங்கியுள்ள தவெக, தனது வாக்கு பலத்தை நிரூபிக்க முயற்சி செய்து வரும் நிலையில்,  கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

மாநிலக் குழு ஆலோசனைக்குப் பிறகு முடிவு :

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இடைத்தேர்தல் தொடர்பான ஆதரவு நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தார். 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் அரசியல் சூழல், மக்கள் மனநிலை, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கட்சியின் மாநிலக் குழுவில் ஆலோசனை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

நாளை பிற்பகல் 2 மணிக்கு அறிவிப்பு :

கம்யூனிஸ்ட் கட்சிகளின்மாநிலக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், நாளை பிற்பகல் 2 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கா? தவெகவுக்கா? அல்லது வேறு நிலைப்பாடா? என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் கட்சிகள்  கம்யூனிஸ்ட் கட்சிகளின் அறிவிப்பை கவனித்து வருகின்றன.

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,  கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு முடிவு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் வியூகங்களை மாற்றக்கூடிய முக்கிய காரணியாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow