கேரளா டூர் ப்ளான் இருக்கா? மூணாறு, இடுக்கி பக்கம் 4 நாளைக்கு போகாதீங்க.. வெதர்மேன் எச்சரிக்கை!

கேரளாவில் உள்ள மூணாறு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜூன் 28ஆம் தேதி வரை பயணம் செல்வதைத் தவிர்த்திடுமாறு தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்னும் 4 நாட்களுக்கு கேரளா பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Jun 26, 2024 - 17:51
கேரளா டூர் ப்ளான் இருக்கா? மூணாறு, இடுக்கி பக்கம் 4 நாளைக்கு போகாதீங்க.. வெதர்மேன் எச்சரிக்கை!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்து வருகிறது. கனமழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கையும், இடுக்கி மற்றும் தென் மாவட்டங்களைத் தவிர எர்ணாகுளம் முதல் வயநாடு வரையிலான 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் இன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோழிக்கோடு, நாதாபுரம், குட்டியாடி போன்ற மலைப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மணிக்கு 40 கி.மீ. வேகத்திற்கும் மேல் காற்று வீசியதில் தாமரச்சேரி பகுதியில் மண் சரிவும் ஏற்பட்டது.

எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், மூணாறு, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் ஜூன் 28ஆம் தேதி வரை மூணாறு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும் குற்றால சீசனை அனுபவிக்கவும் அருவிகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் தென்காசி மாவட்டத்திற்கு படையெடுப்பார்கள். சிலரோ மூணாறு, அதிரப்பள்ளி அருவியை ரசிக்க கிளம்புவார்கள். அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார் பிரதீப் ஜான். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow