ஆம்ஸ்ட்ராங் கொலை: மன்னிப்பு கேட்க முடியாது”- செல்வப்பெருந்தகைக்கு BSP பிரமுகர் பதில்

ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட் மற்றும் பி.பி.ஜி சங்கர் ஆகியோரின் கொலை வழக்குகளில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளதாக இந்த கடிதத்திலும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Sep 30, 2024 - 21:39
ஆம்ஸ்ட்ராங் கொலை: மன்னிப்பு கேட்க முடியாது”- செல்வப்பெருந்தகைக்கு BSP பிரமுகர் பதில்

தான் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை கட்சியை விட்டு நீக்கக்கோரி ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாமல் தன்னை குறித்து பொய் செய்தி வெளியிட்டதாக கூறி 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும், அவதூறு கருத்துக்கு மன்னிப்பு கேட்க கோரியும் ஜெய்சங்கருக்கு செல்வப்பெருந்தகை தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் வகையில் ஜெய்சங்கர் தரப்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்தே, அவருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வதாமனும்   செல்வப்பெருந்தகையும், ஆம்ஸ்ட்ராங் வீட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்று வந்ததாகவும் இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட் மற்றும் பி.பி.ஜி சங்கர் ஆகியோரின் கொலை வழக்குகளில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளதாக இந்த கடிதத்திலும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow