தமிழகத்தில் துரந்தர் 2 திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்:  சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு

துரந்தர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் துரந்தர் 2 திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்:  சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு
துரந்தர் 2 திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்

துரந்தர் படம் வெளியான ஒரு மாதத்தில் உலகளவில் ரூ.1296 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.1011.73 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே வேகத்தில் சென்றால், இப்படம் விரைவில் ரூ.2000 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் துரந்தர் 2 . இத்திரைப்படம் கடந்த 19 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் வழக்கறிஞர் ஷிலா என்பவர் அவசர முறையீடு செய்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15 ம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில் இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தேர்தலுக்கு பின் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்தார். இந்த முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow