மலைப்பகுதியில் தொடரும் கனமழை-தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம்
நெல்லை மாநகர பகுதியான கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
![மலைப்பகுதியில் தொடரும் கனமழை-தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம்](https://kumudam.com/uploads/images/202312/image_870x_658feca713780.jpg)
நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மிக கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. கடந்த 18ம் தேதி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்ட நிலையில் கடந்த ஏழு நாட்களாக மழை ஓய்ந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
அணைகளில் தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான பாபநாசம், களக்காடு, மாஞ்சோலை போன்ற பகுதியில் கனமழை பெய்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 1100 கன அடியில் இருந்து சுமார் ஐந்தாயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
தொடர்ந்து மலைப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் அணைகளில் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. மாவட்டத்தில் அதிகபட்சம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளான ஊத்து பகுதியில் 22 செ.மீ மழையும் நாலுமுக்குவில் 21 செமீ, காக்காச்சியில் 20 செமீ மழையும் பதிவாகியுள்ளது. எனவே மணிமுத்தாறு பாபநாசம் போன்ற அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று மாலை சுமார் 9000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.குறிப்பாக மணிமுத்தாறு அணையில் இருந்து மட்டும் சுமார் 5 ஆயிரம் கண்ணாடி தண்ணீர் தாமிரபரணத்தில் திறந்து விடப்படுகிறது.
இதுதவிர தென்காசி மாவட்டம் கடனா அணையில் இருந்து வரும் நீர் மற்றும் காட்டாற்று வெள்ளம் சேர்த்து சுமார் 10,000 கன அடி தண்ணீர் செல்வதால் ஏழு நாட்களுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக நெல்லை மாநகர பகுதியான கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
அதேசமயம் ஆபத்தை உணராமல் தொடர்ந்து நெல்லை மாநகர பகுதியில் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் கரையோரமாக குளிப்பது துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)