குடிபோதையில் தகராறு - பீர் பாட்டிலால் குத்தியதால் சாவு 

கரூர் மாவட்டம் சௌந்தராபுரத்தில் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

Oct 12, 2024 - 18:48
குடிபோதையில் தகராறு - பீர் பாட்டிலால் குத்தியதால் சாவு 
murder

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு அந்த மதுபானக் கூடத்தில், குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர் (48) பூச்சி மருந்து தெளிக்கும் வேலை செய்து வருகிறார், ஹபீப் நகரச் சேர்ந்த லெனின் (31) பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார், செல்லிவலசு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமரன் (48), தலையாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரகு (30) தனியார் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் பணியாற்றி  வருகிறார் ஆகிய 4 பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர். 

மது போதையில் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும்போது தகராறு உண்டாகியிருக்கிறது. கொஞ்ச நேரத்தில் அது வாய்த் தகராறாக மாறிய நிலையில் லெனின் என்பவர் பீர் பாட்டிலை உடைத்து உடைந்த பீர் பாட்டிலால் சேகர் என்பவருடைய வலது கையில் குத்தியுள்ளார். 

பீர் பாட்டிலால் குத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்படவே குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் உயர் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனையில் சேகரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த சேகர் உடல், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அரவக்குறிச்சி காவல்துறையினர் சேகரை பாட்டிலால் குத்திய லெனினையும் மற்றும் மது அருந்திய மற்ற இருவரையும் விசாரித்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow