சுள்ளென்று அடிக்கும் வெயில்.. ஜில்லென்று பெய்த மழை.. 5 நாட்களுக்கு கவனம் மக்களே.. வானிலை மையம் வார்னிங்

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெப்பக்காற்று வீசி வரும் நிலையில் அனலுக்கு இதமாக ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து பூமியை குளிர்வித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 8ஆம் தேதி வரைக்கும் சராசரி வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Apr 5, 2024 - 14:48
சுள்ளென்று அடிக்கும் வெயில்.. ஜில்லென்று பெய்த மழை.. 5 நாட்களுக்கு கவனம் மக்களே.. வானிலை மையம் வார்னிங்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு-I 4 செமீ,  சிவலோகம் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 3 செமீ,  சுருளக்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2 செமீ, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா  1 செமீ மழை பதிவாகியுள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை : தமிழகத்தில்   அதிகபட்ச   வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.   புதுவையில்  இயல்பை விட சற்று அதிகமாகவும், காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் இருந்தது. வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில  இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் முதல் 3.5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. 

உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் ஒருசில  இடங்களில்   39 டிகிரி செல்சியஸ்  முதல் 41 டிகிரி  செல்சியஸ் வரைக்கும், கடலோரப் பகுதிகளில் 33 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ், மலைப்பகுதிகளில் 23 டிகிரி செல்சியஸ் முதல் 29 டிகிரி வரை  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.4 டிகிரி செல்சியஸ், வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தியில் 40.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.5 டிகிரி செல்சியஸ்,  திருப்பத்தூரில் 40.2 டிகிரி செல்சியஸ்  மற்றும்  தருமபுரியில்  40.0 டிகிரி செல்சியஸ்  பதிவாகியுள்ளது.

மதுரை நகரம், திருச்சி,  நாமக்கல், வேலூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. 

கோயம்புத்தூர், மதுரை விமான நிலையம்,  பாளையம்கோட்டை, தஞ்சாவூர்  மற்றும்   சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.  சென்னை நுங்கம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 38.1 டிகிரி  செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்றும் நாளையும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 7ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 8ஆம் தேதி  கடலோர        மாவட்டங்கள்         மற்றும்        அதனை     ஒட்டிய         மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

9ஆம் தேதியன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  10.04.2024 மற்றும் 11.04.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: 05.04.2024 முதல் 08.04.2024 வரைக்கும் தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும்,  புதுவையிலும்  அதிகபட்ச வெப்பநிலை அடுத்த நான்கு தினங்களில்  2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும். 

அடுத்த நான்கு தினங்களில் அதிகபட்ச    வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ், உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி செல்சியஸ் முதல்  39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

காற்றின் ஈரப்பதம்: அடுத்த நான்கு தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 05.04.2024: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார்  வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow