தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு: வெள்ளி விலை மாற்றமில்லை
தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வெள்ளி விலை மாற்றமில்லாமல் அதே விலையில் நீடித்து வருகிறது.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், சவரன் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது.
நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,16,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,580-க்கு விற்பனையனது. வெள்ளி விலையில் நேற்றைய தினம் எந்த மாற்றமும் இல்லை.
இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,600-க்கு விற்பனை ஆகிறது.
தங்கத்தின் விலை ஒருபுறம் ஏறிக் கொண்டிருந்த அதே வேளையில், வெள்ளியின் விலையும் அண்மையில் பெரும் உயர்வைச் சந்தித்திருந்தது. ஆனால், நேற்று வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் நேற்றைய விலையிலேயே இன்றும் நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 300-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3 லட்சம் என்ற அளவிலேயே விற்பனை செய்யப்பட்டது.
What's Your Reaction?

