‘SPA’ பெயரில் பாலியல் தொழில் செய்த இளைஞர்… கையும் களவுமாக பிடித்த போலீசார்!

திருப்பத்தூரில் ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Sep 24, 2024 - 18:03
‘SPA’ பெயரில் பாலியல் தொழில் செய்த இளைஞர்… கையும் களவுமாக பிடித்த போலீசார்!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார், கடந்த இரண்டு நாட்களால சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள ஸ்பாக்களை கண்காணித்து வந்தனர்.

அப்போது திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே தூய நெஞ்ச கல்லூரி எதிரே உள்ள ’அனீஸ் ஸ்பா’வை கண்காணித்த போது, சேலம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான தமிழ்ச்செல்வன் என்பவர் வெளி மாநிலங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதை கண்டறிந்தனர்.

பிறகு, 40 வயது உள்ள ஒரு பெண்ணையும், 24 வயது உள்ள ஒரு பெண்ணையும் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், பாலியல் தொழில் செய்த தமிழ்செல்வனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக ஸ்பா என்கிற பெயரில் பாலியல் செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். உண்மைத்தன்மை கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow